Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»யாரும் பனையூருக்கு விருப்ப மனு வாங்க வராதீங்க..! தவெக பொதுச்செயலாளர் ஆனந்தின் அறிவிப்பால் நிர்வாகிகள் அதிர்ச்சி..!
Featured

யாரும் பனையூருக்கு விருப்ப மனு வாங்க வராதீங்க..! தவெக பொதுச்செயலாளர் ஆனந்தின் அறிவிப்பால் நிர்வாகிகள் அதிர்ச்சி..!

Editor TN TalksBy Editor TN TalksFebruary 7, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
5 3
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

தவெக சார்பில் வழங்கப்படும் விருப்ப மனுக்கள பெற பனையூர் அலுவலகத்திற்கு யாரும் வரவேண்டாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தவெக சார்பில் நேற்று ( 06.02.2026 ) முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டது. இதனைப் பெறுவதற்காக பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

விருப்ப மனு விநியோகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே 10,000 மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாகவும், வரும் 14-ம் தேதி வரை அலுவலகத்தில் நிர்வாகிகள் பொறுமையாக விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பொதுச்செயலாளர் ஆனந்த், விருப்ப மனுக்களை பெற யாரும் கட்சி அலுவலகம் வரவேண்டாம் என கூறியிருப்பது நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருப்ப மனு விநியோகத்தின் முதல் நாளில், ஆயிரக்கணக்கான மக்கள் பனையூர் பகுதியில் குவிந்ததால், வாகனங்கள் நிறுத்துவதில் ஏற்பட்ட சிக்கல், அங்கு வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்ட இடையூறு, அவர்களது கார்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதம் என பலகட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் நேரடியாகவே நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் புகாரும் அளித்திருந்தனர். ஆகையால் பனையூரில் விருப்ப மனுக்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆகையால் தான், விருப்ப மனுக்களை பெற யாரும் பனையூர் தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள், இன்று ( 07.02.2026 ) முதல் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் தலைமை அலுவலகம் இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இட நெருக்கடியும் ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டுள்ளோம்.

எனவே மக்கள் மீது அக்கறை கொண்ட தளபதி விஜய்யின் அறிவுறுத்தலின் பேரி, விருப்ப மனுக்களை பெற நிர்வாகிகள் யாரும் தலைமை அலுவலகம் வர வேணாம் எனவும், அதற்கு பதில் மனுக்களை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் DMK panaiyur politics pussy aanand tamilnadu TVK tvk vijay தமிழ்நாடு தவெக தவெக தலைவர் விஜய் புஸ்ஸி ஆனந்த்
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதம்பிகளே… அண்ணா எங்கே?
Next Article மகா சிவராத்திரி விரதத்தை இவர்கள் எல்லாம் கடைப்பிடிக்கக்கூடாது!. விதிகள் என்ன தெரியுமா?
Editor TN Talks

Related Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

June 2, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

Trending Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

June 3, 2026

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

June 2, 2026

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.