Author: Editor TN Talks

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோவிலில் மகா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. செங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மகா கருட சேவை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. ஏழாம் நாள் திருவிழாவான இன்று மகா தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி சுவாமி, வீதியுலா வந்தார். இந்த  தேர் விழாவில், செங்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, “கோவிந்தா கோவிந்தா” முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்புக்காக செங்கம் டி.எஸ்.பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் பணியில் ஈடுபட்டனர்.

Read More

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் நான்காம் நாள் பிரம்மோற்சவ விழாவில், சாமிபல்லக்கை சுமந்து செல்லும் கைத் தண்டில் ஏற்பட்ட விரிசல் காரணமாக வீதி உலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று நான்காம் நாள் காலை ஆதிசேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் திருக்கோயிலில் இருந்து வீதி உலா புறப்பட்டார். புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் சாமியை தூக்கி செல்லப் பயன்படும் கைத் தண்டில் திடீர் விரிசல் ஏற்பட்டதால்  பாதம் தாங்கிகள் தடுமாறினர். உடனடியாக வீதி உலா நிறுத்தப்பட்டு விரிசல் குறித்து அனைவரும் பார்வையிட்டு மீண்டும் மற்றொரு தண்டை மாற்றம் செய்தனர். இருப்பினும் இந்த பணிக்கு அதிக நேரம் தேவைப்பட்ட காரணத்தினால் மீண்டும் வீதி உலா சென்று வருவதில் பெரும் சிரமம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பட்டாச்சாரியார்கள்,  பாதம் தாங்கிகள்…

Read More

புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ யோக மாயா லலிதாம்பிகை ஆலயத்தில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கன்யா பூஜை, சுமங்கலி பூஜை நடைபெற்று லலிதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகை மற்றும் ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை திருக்கோவில். இந்த திருக்கோவிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகைக்கு பால், தயிர், சந்தனம்,திருநீர், திருமஞ்சனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கன்யா பூஜை , சுமங்கலி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகை மற்றும் ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை அம்மனுக்கு சோடச தீபாராதனை நடைபெற்றது. இந்த கன்யா, சுமங்கலி பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் லலிதாம்பிகை அம்மனை வழிபட்டு சென்றனர்.  இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி மகேஸ்வர சாஸ்திரிகள் மற்றும் பக்தர்கள்…

Read More

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா, கோடை விடுமுறை மற்றும் சனிக்கிழமை வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.  ​திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று சனிக்கிழமை வார இறுதி விடுமுறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை நிறைவடையும் தருவாய் என்பதால், பழனி மலைக்கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.  ​ அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவியத் தொடங்கினர். அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்குச் செல்வதற்காக இயக்கப்படும் வின்ச் ரயில் நிலையங்கள் மற்றும் ரோப்கார் நிலையங்களில்  நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருக்கின்றனர். ​அதேபோல், மலைக்கோயிலி உள்ள பொது தரிசன வழிகள் மற்றும் கட்டண தரிசன வழிகள் என அனைத்துப் பாதைகளிலும் பக்தர்களின் கூட்டம் இருக்கிறது. பக்தர்கள்…

Read More

பழனியில்கொடியேற்றத்துடன் இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகத் திருவிழா பக்திப் பரவசத்துடன் தொடங்கியது. ​திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் முக்கியப் பெருந்திருவிழாக்களில் ஒன்றான வைகாசி விசாகத் திருவிழா இன்று (24-05-2026, ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ​பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில், இன்று அதிகாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, கோயிலின் கொடிமரத்தில் முறைப்படி திருவிழாக் கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ​இன்றிலிருந்து தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கிரிவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடைபெறுகிறது. ​​முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 29-ஆம் தேதியும், புகழ்பெற்ற வைகாசி விசாகத் தேரோட்டம் 30-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.…

Read More

திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா முன்னிட்டு அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா‌ நடைபெற்றது. காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. இந்த நிலையில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புஷ்ப பல்லக்கு உற்சவத்தில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய அடியார்கள் நால்வரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருத்தேரோட்டம் 27ம் தேதியும், 28ம் தேதி சனிபகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலாவும்,  மற்றும்…

Read More

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வைத்தியநாதசுவாமி வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. சிவபெருமான் வைத்தியநாத ஸ்வாமியாக எழுந்தருளி 24 திருவிளையாடல் புரிந்த ஸ்தலமாக உள்ள இக்கோவிலில் வைகாசி திருவிழா வெகு விமரிசியாக தொடர்ந்து வரும் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த வருடத்திற்கான வைகாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.11 நாள் நடைபெறும் இத்திருவிழாவில் தினம் தோறும் சுவாமி மற்றும் அம்பாள் வெட்டிவேர்சப்புறம், கல்பாக்க விருட்சம், அம்சவாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் வரும் 27ஆம் தேதியும் அதனைத் தொடர்ந்து 29ஆம் தேதி ரத உற்சவம் எனப்படும் தேர் திருவிழாவும் நடைபெறும். முன்னதாக இன்று…

Read More

வடபழனி ஆண்டவர் திருக்கோயிலின் வைகாசி விசாக பிரமோற்சவ பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. சென்னை வடபழனியில் அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக பிரமோற்சவ பெருவிழா மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. முருகப் பெருமானின் அருள் நிறைந்த இந்தத் திருக்கோயில், தமிழகத்தின் புகழ்பெற்ற சக்தி வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக உற்சவம் பக்தர்களுக்கு மிகுந்த ஆன்மீக மகிழ்ச்சியைத் தரும் முக்கிய திருவிழாவாகக் கருதப்படுகிறது. வரும் 20.05.2026 முதல் 31.05.2026 வரை 12 நாட்கள் நீடிக்கும் இந்தப் பெருவிழாவின் போது காலையிலும் இரவிலும் சுவாமி புறப்பாடு விழாக்கோலத்தில் நடைபெறும். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளவும், ஆண்டவரின் அருளைப் பெறவும் இந்த விழா சிறந்த வாய்ப்பை அளிக்கிறது. விழாவின் முதன்மை நிகழ்வான கொடியேற்றம் (த்வஜாரோஹணம்) 21.05.2026 அன்று காலை 7.35 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறுகிறது. இதன் மூலம் உற்சவம் தொடங்கி, பக்தர்களின் பங்கேற்புடன்…

Read More

பொன்விளைந்த களத்தூர் ஶ்ரீ கோதண்ட ராமர் ஸ்வாமி கோயிலில் பிரபாவ வருட பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்த களத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோயில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். மூலவரான ஸ்ரீ கோதண்டராமர் நான்கு கைகளுடன்  ஸ்ரீ கோதண்ட ராமர், சீதா தேவி மற்றும் லட்சுமணருடன் பட்டாபிஷேக கோலத்தில் அமர்ந்து காட்சியளிக்கிறார். பிரசித்திபெற்ற இக்கோயிலில் பிரபாவ வருட பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய குருக்கள், அங்குள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியினை ஏற்றி வைத்தார். பக்தர்கள் ஆலயத்துக்கு சென்று ஸ்ரீ கோதண்டராமரை மனமுருக வழிபாடு செய்தனர்.

Read More

பிரம்மாவின் அகந்தை அகற்றி ஆயிரம் கண்ணுடையவராக சிவபெருமான் காட்சி அளித்த தலம்தான், திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் திருத்தலம் ஆகும். திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த திருக்காரவாசல் திருத்தலம். மூலவர் ‘கண்ணாயிரநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். கார் அகில் மரக்காடு நிறைந்து இத்தலம் இருந்ததால் காறாயில் என்று பெயர் பெற்றது.பிரம்மாவிற்கு ஒருமுறை, தான் எல்லோரையும் விட பெரியவன் என்ற கர்வம் வந்தது. அதனால் சிவபெருமானைக்கூட வழிபடாமல் அவரை அலட்சியம் செய்தார். சிவபெருமான் அவரது அகந்தையை அகற்றிட திருவுளம் கொண்டு அவரது படைக்கும் தொழில் பதவியை அவரிடமிருந்து பறித்து விட்டார். பதவி பறிபோன பிரம்மா கர்வம் அடங்கி பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால் காரை மரங்கள் நிறைந்திருந்த திருக்காறாயில் (திருக்காரவாசல்) வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார். கண்ணாயிரநாதர் என்று பெயர் பெற்றார். கருவறையில் கண்ணாயிரநாதர் சுயம்பு லிங்க உருவில்…

Read More