Author: Editor TN Talks

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா முனீஸ்வரர் திருக்கோவிலில் அண்மையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து தினசரி மண்டல பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. மண்டல பூஜையின் நிறைவு நாளை முன்னிட்டு இன்று 108 பால்குட ஊர்வலம் திருக்கோவில் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி, சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் வளாகத்தில் 108 பால்குடங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி கோவில் வளாகத்தில் இருந்து காந்தி ரோடு, சுப்பாராவ் தெரு, பைராகி மடத் தெரு, சித்தூர் ரோடு மற்றும் சர்ச் ரோடு வழியாக ஊர்வலமாகச் சென்று மகா முனீஸ்வரர் திருக்கோவிலை அடைந்தனர். அங்கு சுவாமிக்கு 108 பால்குடங்களால் சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பல்வேறு வகையான நறுமணப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பட்டு வஸ்திரம்…

Read More

ஆண்டுதோறும் ஆனிமாத வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை உள்ள ஒன்பது நாட்கள் ‘ஆஷாட நவராத்திரி’ அல்லது ‘வராஹி நவராத்திரி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் வராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். எதிரிகளை அழிக்கவும், தடைகளை நீக்கவும், சகல ஐஸ்வர்யங்களைப் பெறவும் இந்த நாட்களில் பக்தர்கள் அம்மனை மனமுருகி வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான (2026) ஆஷாட நவராத்திரி ஜூலை 15ம் தேதி தொடங்கி, ஜூலை 23ம் தேதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலிலும் ஆஷாட நவராத்திரி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக ஜூலை 13ஆம் தேதி காலை கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகத்துடன் விழா தொடங்கியது. அன்றைய தினம் வராஹி தேவிக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 14ஆம் தேதி மஞ்சள் அலங்காரத்துடன், 15ஆம் தேதி குங்கும அலங்காரத்துடன்ம் வராஹி தேவி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 16ம் தேதி சந்தன அலங்காரத்துடன் காட்சி…

Read More

விழுப்புரம் மாவட்டம்  மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு பக்தர்களுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.  மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும்,  பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை அடித்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். ஆடி வெள்ளியை முன்னிட்டு  இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், உள்ளிட்ட விசேஷ பூஜை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.  விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ,சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ,உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து கோவில் எதிரில் பொங்கல் வைத்தும். குழந்தைகளுக்கு மொட்டை அடித்தும்  காது குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அங்காளம்மனுக்குஅங்க பிரதட்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.…

Read More

தமிழகத்தின் மிக முக்கிய சக்தி தலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த புனிதமான நாளில், சமயபுரம் மாரியம்மன்  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளித்து வருகிறார். அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து அம்மனைத் தரிசித்து வருகின்றனர். ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவதால், பக்தர்களின் வருகை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குத் தேவையான  நிழற்பந்தல் வசதிகள்…

Read More

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வாரம் ஆரம்பிக்கும் திருவிழா புரட்டாசி மாதம் வரை 12 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் மஞ்சள், சந்தனம், வெள்ளி, தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்படும் 108 சிறப்பு சங்காபிஷேகம் என்று ஆடி மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து மாலையில் 108 பெண் பக்தர்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 5 வாரம் ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.‌ ஆடி முதல்…

Read More

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புகழ்பெற்ற மிகவும் பழைமையான நல்லாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன் தொடக்க நிகழ்வாககடந்த 7 ம் தேதி காப்பு கட்டப்பட்டதை அடுத்து இன்று காலை பால்குட விழா நடைபெற்றது. அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் தாரை தப்பட்டை முழங்க, குதிரை நடனத்துடன் பக்தர்கள் பால்குட மெடுத்து ஊர்வலமாக வந்தனர். நல்லாண்டவர் கோவிலை வந்தடைந்ததும் மான்பூண்டி நல்லாண்டவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்ற பின் பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஆடி முதல் வெள்ளியான இன்று நல்லாண்டவருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு சுவாமி திருத்தேரில் உட்சுற்று உலா நடைபெற உள்ளது.

Read More

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வானமே கூரையாக கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துவரும் உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் இன்று வெக்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வெக்காளியம்மனை தரிசித்து வருகின்றனர்.  மேலும் எலுமிச்சை நெய் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர். உறையூர் வெக்காளியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் திருச்சி மாவட்டம் மட்டுமல்ல அது அருகாமை மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை முதல் பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசை நின்று தரிசனம் செய்து…

Read More

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், ஆடி முளைக்கொட்டு திருவிழா இன்று (ஜூலை 16) கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் உள்ள சுவாமி சன்னதி கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க முறைப்படி கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டியும் முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். இந்தநிலையில், ஆடி முளைக்கொட்டு விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம் , நவராத்திரி விழா, மார்கழி எண்ணெய்க் காப்பு ஆகியவை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு மட்டும் உரிய சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில், இன்று தொடங்கிய இந்த ஆடி முளைக்கொட்டு திருவிழா தொடர்ந்து பத்து நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறவுள்ளது. திருவிழா நாட்களில் தினமும்…

Read More

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் (பெருவுடையார் கோவில்) ஸ்ரீ மகா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி விழா இன்று தொடங்கியது. முதல் நாள் நிகழ்வாக, மகா கணபதி ஹோமம் மற்றும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை நேரத்தில் இனிப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தஞ்சை பெரியகோவிலில் அருள்பாலிக்கும் வாராஹி அம்மனுக்கு மட்டுமே இந்த ஆஷாட நவராத்திரி விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி விழா நாட்களில் அம்மனுக்கு இனிப்பு, மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய் பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், கனிவகை, காய்கறி மற்றும் புஷ்ப அலங்காரங்கள் என ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. விழா நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை வாராஹி ஹோமமும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

Read More

ஆனி பிரம்மோற்சவம் நான்காம் நாள் இரவு உற்சவத்தில் விநாயகர் வெள்ளி கவசமும் மற்றும் சந்திரசேகர் வென் பட்டு  அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 8ம் தேதி காலை அண்ணாமலையார் கோவிலில் தட்சிணாயன புண்ணிய காலம் என்று சொல்லக்கூடிய ஆனி பிரம்மோற்சவ விழாவையொட்டி 63 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நான்காம் நாள் இரவு உற்சவத்தில் அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. குறிப்பாக விநாயகருக்கு வெள்ளி கவசமும் சந்திரசேகர் வெண் பட்டு அலங்காரமும் செய்து சரவிளக்கு தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு தீபாரதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் ஊழியர்கள் விநாயகர் மற்றும் சந்திரசேகரரை…

Read More