Author: Editor TN Talks

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோவிலில் நடைபெற்ற பிரம்மாண்டமான தெப்பத்திருவிழாவில்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்டவிழா கடந்த மார்ச் 29ஆம் தேதி நடைப்பெற்றது. இதற்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த தெப்பத் திருவிழா மே 8ஆம் தேதி தொடங்கியது. கமலாலய குளத்தில் 432 இரும்பு பேரல்களில் காற்று நிரப்பி 2 அடுக்காக மூங்கிலால் கட்டப்பட்டு மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்பம் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீ தியாகராஜ சுவாமி  ஸ்ரீபார்வதி சமேத கல்யாணசுந்தரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தெப்பத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்று  300 க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவு உள்ள குளத்தை சுற்றி தெப்பம் வலம் வந்தது , குளத்தின் சுற்றியுள்ள படித்துறைகளில் ஏராளமான பக்தர்கள்  தெப்பம் வலம்வருவதை கண்டு தரிசித்தனர் , தெப்பதிருவிழாவில்  மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் , சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன் , மாவட்டவருவாய்…

Read More

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெறும் நிலையில் பிரமாணடமான தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூரில் உள்ள  அருள்மிகு ஸ்ரீ தியாகராஜசுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திர ஆழித்தேரோட்டவிழா கடந்த மார்ச் 29ஆம் தேதி தியாகராஜசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா விழா நடைபெற்ற நிலையில், தெப்பத்திருவிழா நாளை 8ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு மூன்று சுற்றுகள் வீதம் விடியற்காலை வரை தெப்பத்திருவிழா  நடைப்பெறும் , இதையொட்டி திருவாரூர் பெரிய கோவில் எதிரில் உள்ள கமலாலய குளத்தில்  475 இரும்பு பேரல்களில்  காற்று நிரப்பி 2 அடுக்காக மூங்கில் கட்டப்பட்டு  300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தெப்பத்தில்  வலம்வரும் வகையில்  பிரமாண்டமான தெப்பம் கட்டும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது , உலகப்புகழ்பெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமி தெப்பத்திருவிழாவில் ஸ்ரீபார்வதி சமேத கல்யாணசுந்தரர் சுவாமி எழுந்தருளி…

Read More

திருவாடானை பிடாரி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவினையொட்டி சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதி உலா வந்தார். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி (பிடாரி அம்மன்) திருக்கோவில் சித்திரைத் திருவிழா மே 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவாடானை நான்கு ரத வீதிகள் வழியாக வான வேடிக்கைகளுடன் வீதி உலா  வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இளைஞர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Read More

நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. தேவாரப் பாடல் பெற்ற புகழ்பெற்ற இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செட்டிப்பெண் – செட்டிப்பிள்ளை திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “ஹரஹர மகாதேவா” என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்து பக்தி பரவசத்துடன் வழிபாடு மேற்கொண்டனர்.

Read More

தவெக சார்பில் வழங்கப்படும் விருப்ப மனுக்கள பெற பனையூர் அலுவலகத்திற்கு யாரும் வரவேண்டாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தவெக சார்பில் நேற்று ( 06.02.2026 ) முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டது. இதனைப் பெறுவதற்காக பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். விருப்ப மனு விநியோகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே 10,000 மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாகவும், வரும் 14-ம் தேதி வரை அலுவலகத்தில் நிர்வாகிகள் பொறுமையாக விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பொதுச்செயலாளர் ஆனந்த், விருப்ப மனுக்களை பெற யாரும் கட்சி அலுவலகம் வரவேண்டாம் என கூறியிருப்பது நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருப்ப மனு விநியோகத்தின் முதல் நாளில், ஆயிரக்கணக்கான…

Read More

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அண்ணா நகர் உண்டு.. தமிழ் நிலமெங்கும் அண்ணா சிலைகள் உண்டு… சென்னையில் அண்ணா நகரும் உண்டு, அண்ணா மேம்பாலமும் உண்டு, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமும் உண்டு, அண்ணா பல்கலைக்கழகமும் உண்டு. அவர் தொண்டனாக இருந்த இயக்கம் இப்போதும் இருக்கிறது. அவர் ஆரம்பித்து வைத்த கட்சி இப்போது ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. அவர் பெயரிலான கட்சி எதிர்கட்சியாக வலம்வருகிறது. ஆனால் தமிழர் இல்லங்களில், அவர் வழிவந்த கட்சித் தொண்டர்களின் உள்ளங்களில் அண்ணா இருக்கிறாரா? என்பதே அவரது 57-வது நினைவுதினத்தில் நாம் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி. “காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான் – கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்”, “அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா” என உச்சஸ்தாயியில் ஒலிக்கின்றன வீதிதோறும் அண்ணாவைப் பற்றிய பாடல்கள். அவரைப் போல பேசிக்காட்டும் குரல் கலைஞர்கள் மேடைதோறும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது சிலைகள் ரோஜாப்பூக்களுக்குள் புதைந்து…

Read More

நாக தோஷமும், கேது தோஷமும் இருப்பவர்கள் கீழ்க்கண்ட திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீமாகாளேஸ்வரர் கோயிலில் ராகுவும், கேதுவும் மனித உருவில் காட்சியளிக்கின்றனர். இவர்களை செவ்வாய், வெள்ளி, ஞாற்று கிழமைகளில் ராகு காலத்தில் வழிபட்டால் தோழ நிவர்த்தி பெறலாம். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரில் உள்ள மூலவர் நாகநாதர் அம்பாள் பிரகதாம்பாள் ஆலயம் நாக தோஷத்தை நீக்க கூடியது. இதே பேரையூரில் இருக்கும் நாகநாதர் சுவாமியை தரிசித்தாலும் தோஷ பலனை அடையலாம். இங்கு போக முடியவில்லை என்றால் திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணங்குடி பகுதியில் இருக்கும் ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஆலயமும் ராகு கேதுவுக்கு சிறந்த பரிகாரத் தலமாகும். இதே மாவட்டத்தில் இருக்கும் பாமணி தலத்தில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் நாதநாதரை வழிபடலாம். இங்குள்ள ஆதிசேஷனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நாகதோஷமும், கேது தோஷமும் நிவர்த்தி அடையலாம். நாகை மாவட்டத்தில் உள்ள நாகநாத சுவாமி, திரும்பரத்தில் உள்ள சௌந்தரநாயகி…

Read More

தை அமாவாசையை ஒட்டி திருப்பதியில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தை அமாவாசையை ஒட்டி நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை தமிழக மக்கள் வழிபட்டனர். அதன் தொடர்ச்சியாக திருப்பதியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களன ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு சிறப்பு அலங்காயம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் காளஹஸ்தியில் உள்ள  பரத்வாஜேஸ்வரர் கோயில் வளாகத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆதாரனைகளும் நடத்தப்பட்டு, கலசங்களுக்கு வேத பண்டிதர்கள் சிறப்பு பூஜை செய்தனர். இதில் காளஹஸ்தி கோயில் அறங்காவலர் குழு தலைவர் கொட்டே. சாய் பிரசாத், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  இறுதியாக உற்சவர் மூர்த்திகளின் நான்கு மாட வீதி உலாவும் நடைபெற்றது.

Read More

‘திமுக கூட்டணியில் சலசலப்புகள் நிலவுகிறது’ என்ற செய்திகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது தொகுதி பங்கீட்டில் நிலவும் வாய்க்கால் பிரச்சனைகள் தான். அப்படிப்பட்ட தொகுதி பங்கீடு விவகாரத்தில் தற்போது திமுக ஒரு முடிவு செய்திருப்பதாகவும், விசிகவை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு முக்கிய நகர்வை திமுக மேற்கொள்ள உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் திமுகவின் தேர்தல் பணிகளோடு சேர்த்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் உள்ள வெற்றி வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கசிந்த தகவலின் படி, “கூட்டணி கட்சிகள் கடந்த முறை எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றனரோ, அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் இம்முறை சீட் ஒதுக்குவோம்” என சில முக்கிய நிர்வாகிகள் கறாராக சொல்லியிருக்கிறார்கள். இந்த கூட்டத்தின் முடிவில், “திமுகவுக்கு 170 சீட்டுகள்; தோழமைகளுக்கு 64” என…

Read More

அஸ்வினி: வேலையிடத்து பிரச்சனையை வீட்டிற்குக் கொண்டுவர வேண்டாம் . பரணி: பழைய வீட்டில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வீர்கள். கார்த்திகை: உங்களின் வார்த்தையில் மயங்கி உதவிகள் தேடி வரும். ரோகிணி: மனைவியின் பேச்சில் கிறங்கிக் கிடப்பீர்கள். மிருகசீரிடம்: சலிப்பில்லாத உழைப்பால் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். திருவாதிரை: எந்தக் காரியத்திலும் நிதானம் தவறி நடக்காதீர்கள். புனர்பூசம்: சிக்கலாக இருந்த வியாபாரம் சீராக நடக்கத் தொடங்கும் . பூசம்: தவறாக நினைத்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து தேடி வருவார்கள். ஆயில்யம்: பிள்ளைகளின் கடமையை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். மகம்: புதிய சொத்து வாங்குவதற்காக அட்வான்ஸ் கொடுப்பீர்கள். பூரம்: குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்திரம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவான நிலை ஏற்படும். அஸ்தம்: வெளிநாடு செல்வதற்காக விசா அப்ளை பண்ணுவீர்கள். சித்திரை: வாக்குத் திறமையால் எதிரிகளையும் நண்பர்கள் ஆக்குவீர்கள். சுவாதி: முடியாத காரியத்தை முடித்து முதலாளியின் அன்பைப் பெறுவீர்கள் விசாகம்: ஆன்லைன்…

Read More