Author: Editor TN Talks
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட் டம் காணப்படுகிறது. சுவாமியை தர்ம தரிசனம் வாயிலாக தரிசிக்க 34 கம்பார்ட்மென்டுகளும் நிரம்பி, கோயிலுக்கு வெளியே நாராயணகிரியை தாண்டி, சிலா தோரணம் வரை சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்திலும், அன்னதான மையத்திலும், தரிசன வரிசையிலும், லட்டு பிரசாதம் வாங்குவதற்கும், காலண்டர்கள், டைரிகள் வாங்கவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், டீ, காபி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. மொபைல் குடிநீர் வாகனம் மூலம் பக்தர்களுக்கு உடனுக்குடன் குடிநீர் வழங்கப்படுகிறது. நேற்று முதல் நாளை 29-ம் தேதி வரை திருமலை மற்றும் திருப்பதி விமான நிலையத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் வழங்குவதை தேவஸ்தானம் நிறுத்தியதால், பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பினர்.…
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க A.I. தொழில்நுட்பத்தை பயன்படுத்த திமுக தேர்தல் அறிக்கை குழு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் அரசியல் கட்சிகள், கவர்ச்சிகரமான திட்டங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிடுவது வழக்கம். இதற்காக குழுக்களை அரசியல் கட்சிகள் அமைக்கும். அதன்படி, திமுகவில் கனிமொழி எம்பி தலைமையில் அக்கட்சி குழு அமைத்துள்ளது. அக்குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை கேட்பதற்காக A.I. தொழில்நுட்பத்தில் செயல்படும் பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், விருப்பங்களை பதிவிடலாம். அதை பரிசீலித்து, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த இணையதளத்தை விரைவில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தேர்தல் அறிக்கையை தயாரிக்க A.I. தொழில்நுட்பத்தை திமுக பயன்படுத்துவது இதுவே முதல்முறையாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.…
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் டிச.31ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. வழக்கமாக ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான், அரசியல் கட்சிகள் தேர்தலை நோக்கி வேகமெடுத்து செயல்படும். டிசம்பர் மாதத்தின் மத்தியிலேயே, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி விறுவிறுப்பு காட்டி வருகின்றன. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வினியோகத்தை டிசம்பர் 15ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடங்கிவைத்தார். டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டனர். தற்போது அதிமுகவில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து, இபிஎஸ் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கட்சியினர் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, டிசம்பர் 28ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் டிசம்பர் 31ம்…
மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் குரு(வ) – பஞ்சம ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் – லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன. பலன்கள்: இந்த வாரம் மனதில் இருக்கும் கவலைகள் மறையும். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள். வீடு, மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் சனி அமர்ந்திருக்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்தில் இருந்து பொறுப்புகள் அதிகமாக…
12 ராசிகளுக்கும் இன்று நாள் எப்படி உள்ளது என்பது துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளது. அதை காணலாம். மேஷம்: இன்று புரிந்து கொள்ள முடியாத மற்றும் அற்புதமான நிகழ்வால் குழப்பமடைவீர்கள். அது நீங்கள் எதிர்பாராத வகையில் இருக்கும். காலக்கெடுவை சமாளிக்க நீங்கள் சிரமப்படுவீர்கள். உங்கள் வேலையின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படுவீர்கள். ரிஷபம்: உங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் ஏமாற்றமும், எரிச்சலும் ஏற்படலாம். நபர்களையும் பொருட்களையும் பற்றி இயல்பாகவே உணர்வு பூர்வமாக கருதுபவர். அதீத அணுகுமுறை யாருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தாது. தவறுகளை நியாயப்படுத்தும் மனப்போக்கு மோசமாக்கலாம். நியாயமான கோபத்தை நீங்கள் புறக்கணிப்பீர்கள். மிதுனம்: குடும்பத்தினருடன் பயணம் செய்ய விரும்பும் ஆசை இன்று அதிகரிக்கும். உங்கள் பயணத்தை திட்டமிடுவீர்கள். பயணத்திற்கு உகந்த நேரம் இது. உங்கள் வரவு செலவு திட்டத்திற்குள் பயண திட்டங்களை திருப்திகரமாக நிறைவேற்ற முடியும். கடகம்: அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தாலும் உங்களுடைய திறமையை உயரதிகாரிகள் முழுமையாக மதிக்காததால் மனம் வருத்தப்படுவீர்கள். உங்கள் உறுதியான மனோ தைரியம் வெற்றி பெறும் என்பதை…
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி படையில்லாத மன்னவனாக இருக்கிறார், என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி, சேலம் அண்ணாபூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியது: மதத்தின் பெயரால் வாக்குகளை வாங்க நினைப்பவர்களிடம் யார் அடிமையாக இருந்தாலும், நாங்கள் அதற்கு எதிராக இருப்போம். படையில்லாத மன்னவனாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இருக்கிறார். மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் தொகுதிகளை கேட்க வரவில்லை. அவர்கள் முடிவை சொல்லி ஒப்புக்கொள்ளச் சொல்லவே வந்துள்ளார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக-வுக்கு 75 தொகுதிகள் கேட்டு அடம் பிடித்து வருகின்றனர். அதில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கான சீட் உள்ளடங்கும். தற்போது, அதிமுக-வை 80 சதவீதம் அழித்து விட்டனர். பாமக தொண்டர்கள் தந்தைக்கு ஒட்டு போடுவதா, மகனுக்கு ஓட்டு போடுவதா என்ற குழப்பத்தில் உள்ளனர். பாமக-வைத்து இனி படம்…
25.12.2025 | விசுவாவசு 10 மார்கழி | வியாழக்கிழமை திதி: பஞ்சமி மதியம் 1.43 வரை, பிறகு சஷ்டி. நட்சத்திரம்: அவிட்டம் காலை 8.16 வரை, பிறகு சதயம். நாமயோகம்: வஜ்ரம் பிற்பகல் 3.09 வரை, பிறகு சித்தி. நாமகரணம்: பாலவம் மதியம் 1.43 வரை, பிறகு கௌலவம். நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9. யோகம்: சித்தயோகம் காலை 8.16 வரை, பிறகு மந்தயோகம். சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை. சந்திராஷ்டமம்: பூசம் காலை 8.16 மணி வரை, பிறகு ஆயில்யம். சூரிய உதயம்: சென்னையில் காலை 6.28 மணி. அஸ்தமனம்: மாலை 5.49 மணி. ராகு காலம்: மதியம் 1.30-3.00 எமகண்டம்: காலை 6.00-7.30 குளிகை: காலை 9.00-10.30 நாள்: வளர்பிறை. அதிர்ஷ்ட எண்: 4, 9. பரிகாரம்: தைலம்.
12 ராசிகளுக்கும் இன்றைய (டிச.25) ராசி பலன்களை பார்க்கலாம். மேஷம்: மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வியாபாரத்தை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சமூகத்தில் பிரபலமானவரைச் சந்திப்பீர்கள். ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். கலைப்பொருட்கள் சேரும். மிதுனம்: அடிக்கடி பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். மனதில் நிம்மதி பிறக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். கடகம்: மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம். சிம்மம்: சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள்…
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். குறிப்பாக, தங்கள் தொகுதியில் பழனிசாமி போட்டியிட கோரி ஏராளமானோர் விருப்ப மனுகக்ளை சமர்ப்பித்துள்ளனர். தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைகளுக்கு பொதுத்தேர்தல் வரவுள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. அதன்படி, அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்கள், விருப்பமனு வழங்க ஏதுவாக, விருப்பமனு விநியோகம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் பொது மற்றும் தனி தொகுதிகள் அனைத்துக்கும் ரூ.15 ஆயிரம், புதுச்சேரியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு ரூ.5 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. விருப்ப மனுவில் அதிமுகவில் எந்த ஆண்டிலிருந்து உறுப்பினராக உள்ளீர்கள், கட்சியில் தற்போது வகிக்கும் பதவி, சார்ந்த சமூகம், தமிழ் தவிர சரளமாக பேசத்தெரிந்த பிற மொழிகள், வெற்றி வாய்ப்பு விவரம், கட்சி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள், கட்சி போராட்டங்களில்…
24.12.2025 | விசுவாவசு 09 மார்கழி | புதன்கிழமை திதி: சதுர்த்தி மதியம் 1.12 வரை, பிறகு பஞ்சமி. நட்சத்திரம்: திருவோணம் காலை 7.05 வரை, பிறகு அவிட்டம் நாமயோகம்: ஹர்ஷணம் பிற்பகல் 3.58 வரை, பிறகு வஜ்ரம். நாமகரணம்: விஷ்டி மதியம் 1.12 வரை, அதன் பிறகு பவம். நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8. யோகம்: சித்தயோகம் காலை 7.05 வரை, பிறகு பிரபலாரிஷ்டம் சூலம்: வடக்கு, வடகிழக்கு சந்திராஷ்டமம்: புனர்பூசம் காலை 7.05 மணி வரை, பிறகு பூசம். சூரிய உதயம்: சென்னையில் காலை 6.27 மணி. அஸ்தமனம்: மாலை 5.49 மணி. ராகு காலம்: மதியம் 12.00-1.30 எமகண்டம்: காலை 7.30-9.00 குளிகை: காலை 10.30-12.00 ராகு காலம்: மதியம் 12.00-1.30 எமகண்டம்: காலை 7.30-9.00 குளிகை: காலை 10.30-12.00
