Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆன்மீகம்»விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!
ஆன்மீகம்

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

editor5By editor5June 3, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
image 3
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

தேரோட்டத்தையொட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

108 திவ்யதேசங்களில் ஒன்றான புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. காலை முதல் நடைபெற்ற தேரோட்டம் பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இன்று காலை அதிகாலை 3 மணியளவில், 100 டன் எடை கொண்ட, 63 அடி உயரம், 30 அடி அகலம் மற்றும் 5 நிலைகள் கொண்ட பிரம்மாண்டமான தேரில் தேவராஜன் எழுந்தருளினார். மேளதாளங்கள் முழங்க, “கோவிந்தா… கோவிந்தா” என்ற பக்தி கோஷங்கள் எழ, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து நகரின் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வரும் காட்சி பக்திப் பெருக்கு ஏற்படுத்தியது.

தலபுராணம்: இக்கோயிலில் வரதராஜ பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஐதீகப்படி, பிரம்மன் தனது மனத் தூய்மைக்காக காஞ்சீபுரத்தில் யாகம் நடத்தினார். அப்போது அவரது மனைவி சரஸ்வதியைத் தவிர்த்து சாவித்திரி, காயத்ரி ஆகியோருடன் யாகத்தைச் செய்ததால் கோபமடைந்த சரஸ்வதி, வேகவதி ஆறாக உருவெடுத்து யாகத்தை அழிக்க வந்தாள். இதனை அறிந்த பிரம்மன் மகாவிஷ்ணுவை வேண்ட, பெருமாள் வெள்ளப் பெருக்கின் வழியில் படுத்து ஆற்றைத் தடுத்தார். இதனால் யாகம் காப்பாற்றப்பட்டது. இந்த வரம் தந்த பெருமாள் என்பதால் ‘வரதராஜர்’ என்ற பெயர் பெற்றார்.

யாக குண்டத்தில் இருந்து புண்ணியகோடி விமானத்துடன் பெருமாள் தோன்றினார். பிரம்மன் அத்தி மரத்தில் சிலை வடித்து இங்கு பிரதிஷ்டை செய்ததால் இத்தலம் ‘அத்திகிரி’ என்றும் அழைக்கப்படுகிறது. ஐராவத யானை மலையாக நின்று பெருமாளைத் தாங்கியதாகவும் ஐதீகம் உண்டு.

சிறப்பம்சங்கள்: இங்கு முதலில் 16 கரங்கள் கொண்ட சுதர்சன ஆழ்வாரை (பிரதான மூர்த்தியாக) தரிசித்த பின்னரே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஒரு ஏழை இளைஞனின் திருமணத்திற்காக பெருந்தேவி தாயாரை வேண்டியபோது, தாயாரின் சன்னதியில் தங்க மழை பொழிந்த வரலாறும் புகழ்பெற்றது.

மற்றொரு சிறப்பு, தங்கப்பல்லி மற்றும் வெள்ளிப்பல்லி. கவுதம முனிவரின் சீடர்களான இரு சகோதரர்கள் தவறிழைத்ததால் பல்லிகளாக சபிக்கப்பட்டனர். வரதராஜரை வழிபட்டதன் பலனாக அவர்களின் உடல்கள் பஞ்சலோகத்தால் ஆன பல்லிகளாக மாறி, பக்தர்களுக்கு தோஷ நிவர்த்தி அருள்பாலிக்கின்றன.

வைகாசி பிரம்மோற்சவத்தில் 3-ம் நாள் கருட சேவை, 7-ம் நாள் தேரோட்டம், 9-ம் நாள் தீர்த்தவாரி ஆகியவை முக்கிய நிகழ்வுகள் ஆகும். இன்றைய தேரோட்டம் காஞ்சிபுரம் முழுவதும் பக்தர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் அனைவரும் வரதராஜரின் அருளால் சகல நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பினர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleநெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!
Next Article 2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?
editor5

Related Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

June 2, 2026

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

June 2, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

Trending Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

June 2, 2026

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

June 2, 2026

அஷ்டாட்சர மந்திரத்தை அருளிய திருக்கோஷ்டியூர் திவ்ய தலம்!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.