ஆனி பிரம்மோற்சவம் நான்காம் நாள் இரவு உற்சவத்தில் விநாயகர் வெள்ளி கவசமும் மற்றும் சந்திரசேகர் வென் பட்டு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி காலை அண்ணாமலையார் கோவிலில் தட்சிணாயன புண்ணிய காலம் என்று சொல்லக்கூடிய ஆனி பிரம்மோற்சவ விழாவையொட்டி 63 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நான்காம் நாள் இரவு உற்சவத்தில் அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. குறிப்பாக விநாயகருக்கு வெள்ளி கவசமும் சந்திரசேகர் வெண் பட்டு அலங்காரமும் செய்து சரவிளக்கு தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு தீபாரதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கோவில் ஊழியர்கள் விநாயகர் மற்றும் சந்திரசேகரரை தோளில் சுமந்து ராஜகோபுரம் எதிரே அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருள செய்து, நான்கு மாட வீதியில் வலம் வந்தனர். விநாயகர் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாளித்தனர்.

