தமிழகத்தின் மிக முக்கிய சக்தி தலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த புனிதமான நாளில், சமயபுரம் மாரியம்மன்  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளித்து வருகிறார்.

அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து அம்மனைத் தரிசித்து வருகின்றனர்.

ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவதால், பக்தர்களின் வருகை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டம் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குத் தேவையான  நிழற்பந்தல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், நெரிசலைக் கட்டுப்படுத்தவும் கோவில் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தாலும், மாரியம்மனின் அருளைப் பெற்ற உற்சாகத்துடன் அம்மனைத் தரிசித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version