விழுப்புரம் மாவட்டம்  மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு பக்தர்களுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

 மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும்,  பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை அடித்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

ஆடி வெள்ளியை முன்னிட்டு  இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், உள்ளிட்ட விசேஷ பூஜை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

 விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ,சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ,உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து கோவில் எதிரில் பொங்கல் வைத்தும். குழந்தைகளுக்கு மொட்டை அடித்தும்  காது குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மேலும் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அங்காளம்மனுக்குஅங்க பிரதட்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆடி மாதத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

அந்த வகையில் இன்று ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு பக்தர்களுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கூழ்வாங்கி பருகினர்.

Share.
Leave A Reply

Exit mobile version