திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோவிலில் நடைபெற்ற பிரம்மாண்டமான தெப்பத்திருவிழாவில்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்டவிழா கடந்த மார்ச் 29ஆம் தேதி நடைப்பெற்றது. இதற்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த தெப்பத் திருவிழா மே 8ஆம் தேதி தொடங்கியது.

கமலாலய குளத்தில் 432 இரும்பு பேரல்களில் காற்று நிரப்பி 2 அடுக்காக மூங்கிலால் கட்டப்பட்டு மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்பம் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீ தியாகராஜ சுவாமி  ஸ்ரீபார்வதி சமேத கல்யாணசுந்தரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தெப்பத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்று  300 க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவு உள்ள குளத்தை சுற்றி தெப்பம் வலம் வந்தது ,

குளத்தின் சுற்றியுள்ள படித்துறைகளில் ஏராளமான பக்தர்கள்  தெப்பம் வலம்வருவதை கண்டு தரிசித்தனர் ,

தெப்பதிருவிழாவில்  மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் , சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன் , மாவட்டவருவாய் அலுவலர்  கலைவாணி , வேளாகுறிச்சி ஆதீனம், இணை ஆணையர் செந்தில்குமார், துணை ஆணையர் கவிதா , உதவி ஆணையர் இளம்பெருவழுதி , செயல்அலுவலர் கவியரசு  உட்பட பலர் கலந்துகொண்டனர்,

8ஆம் தேதி தொடங்கிய தெப்பத் திருவிழா 10ஆம் தேதி வரை, மாலை தொடங்கி  ஒரு நாளைக்கு மூன்று சுற்றுகள் வீதம் விடியற்காலை வரை  நடைப்பெறுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version