திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெறும் நிலையில் பிரமாணடமான தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூரில் உள்ள  அருள்மிகு ஸ்ரீ தியாகராஜசுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திர ஆழித்தேரோட்டவிழா

கடந்த மார்ச் 29ஆம் தேதி தியாகராஜசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா விழா நடைபெற்ற நிலையில், தெப்பத்திருவிழா நாளை 8ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு மூன்று சுற்றுகள் வீதம் விடியற்காலை வரை தெப்பத்திருவிழா  நடைப்பெறும் ,

இதையொட்டி திருவாரூர் பெரிய கோவில் எதிரில் உள்ள கமலாலய குளத்தில்  475 இரும்பு பேரல்களில்  காற்று நிரப்பி 2 அடுக்காக மூங்கில் கட்டப்பட்டு  300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தெப்பத்தில்  வலம்வரும் வகையில்  பிரமாண்டமான தெப்பம் கட்டும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது ,

உலகப்புகழ்பெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமி தெப்பத்திருவிழாவில் ஸ்ரீபார்வதி சமேத கல்யாணசுந்தரர் சுவாமி எழுந்தருளி அருள்பாலிப்பார் , தெப்பத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்று  குளத்தை சுற்றி தெப்பம் வலம்வருவதை  காண லட்சக்கணக்கான பக்தர்கள்  வருகை தருவர் என்பது குறிப்பிடத்தக்கது .

Share.
Leave A Reply

Exit mobile version