ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலில் 47-ஆம் ஆண்டு ஆடிமாத 4-ம் வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு ஊரில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் படவேட்டம்மனுக்கு வேண்டுதல் செலுத்தும் விதமாக சுமார் 1,500 பால்குடம் எடுக்கும் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக ஊரில் வசிக்கும் ஏராளமான பெண்கள், ஆண்கள், குழந்தைகள் வயதான முதியவர்கள் என 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை முதலே வன்னிவேடு பாலாற்றங்கரையில் இருந்து பல்வேறு புஷ்ப மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான ‘பூ கரகத்துக்கு’ சிறப்பு பூஜைகள் செய்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அனைவரும் பால் குடங்களை தலையில் சுமந்து கொண்டு முக்கிய சாலையின் வழியாக “கழுகு” பார்வை காட்சியில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை திருவிழா கோலபோல ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அதன் பின்னர் கருவறையில் உள்ள படவேட்டமனுக்கு காப்பு கட்டி விரதமிருந்த ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்றபடி தங்களுடைய கைக்கரங்களால் பாலபிஷேகம் செய்து மஹா தீபாரதனை காண்பித்தவாறு அம்மனை மனமுருகி ஓம்சக்தி ஒம்சக்தி என்று பக்தி முழக்கங்களை வெளிப்படுத்தி அம்மனை வழிப்பட்டு சென்றனர்.
மேலும் நடைபெற்ற ஆடிமாத பால்குட திருவிழாவில் வாலாஜாபேட்டை மட்டுமின்றி செங்காடு, வள்ளுவம்பாக்கம், அனந்தலை, முசிறி, உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் மற்றும் தம்பிமார் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்கி தரிசனம் செய்தனர்.
