Author: Editor 4 web
திருப்பத்தூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம் ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், புதிய கொடி மரம் பூஜை அம்மனுக்கு செங்கோல் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் நகர் ராமக்கா பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், புதிய கொடி மரம் பூஜை, அம்மனுக்கு செங்கோல் வழங்குதல் போன்றவை சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் மற்றும் பாலபிஷேகம் கொண்டு அம்மனுக்கு தீபாரதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு கிராமத்தில் அகத்தியர் முனிவரால் வழிபட்ட திருத்தலமாகப் போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் புனித பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பல்வேறு புஷ்ப மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோல், அகத்தீஸ்வரர் மற்றும் புவனேஸ்வரி அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை நடைபெற்றது. பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபட்டால் பாவங்கள் நீங்கி, குடும்பத்தில் அமைதி, ஆரோக்கியம் மற்றும் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதனால் வன்னிவேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை…
”குலத்தை காக்கும் தெய்வம் குலதெய்வம்”. ஒவ்வொரு குடும்பத்திற்கும் எப்படி முன்னோர்களின் வரலாறு இருக்கிறதோ அதேப்போல, முன்னோர்கள் வழிபட்ட குலதெய்வத்தின் வரலாறும் நிச்சயம் இருக்கும். அப்படியான குலதெய்வத்தை ஒவ்வொரு மனிதரும் வருடத்திற்கு ஒருமுறையேனும் சென்று தரிசனம் செய்து வருவர். பெற்ற தாயைப் போன்று பிள்ளைகள் கேட்காவிட்டாலும் அவர்களின் தேவை அறிந்து அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைக்கும் சக்தி குலதெய்வத்திற்கு உண்டு என்பது நம்பிக்கை. ஆகையால் தான் எந்தக் காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும் என முன்னோர் கூறுவர். அதேப் போல, ஒருவரது குலம் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானாலும் குலதெய்வ வழிபாடு மிகமிக முக்கியம். வேரின்றி மரங்கள் செழிப்பதில்லை; அதுபோல குலதெய்வ வழிபாடின்றி வாழ்வு சிறப்பதில்லை என்பது முன்னோர்களின் நம்பிக்கை. அப்படியான குலதெய்வத்தை அவரவர் வழிபடும் முறைகளோடு வழிபட வேண்டும். ஒரு சில குலதெய்வங்களுக்கு சைவமும், ஒரு சில குலதெய்வங்களுக்கு அசைவமும் பிடித்ததாக இருக்கும். அப்படியிருக்க, அவரவர் குலதெய்வத்தின்…
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழா களைக்கட்டும். அனைத்து விதமான அம்மன் கோயில்களிலும் ஆடி மாதத்தில் பக்தர்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அத்தோடி ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் தரப்படும் பிரசாதங்களில் முதன்மையானது கூழ். கம்மங்கூழ் வார்த்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆடி மாதம் என்றாலே காற்றும், வெப்பமும் இணைந்திருக்கும். வெப்பம் குறைந்து காற்றில் கொஞ்சம் குளுமை பரவும் மாதம் இது. இந்த சமயத்தில் உடல் உஷ்ணமான நோய்கள் தாக்கக் கூடும் என்பதால், அம்மன் வழிபாடு ஆடி மாதத்தில் செய்யப்படுகிறது. அதேபோல், அம்மனுக்கு பூஜைகளும் வழிபாடுகளும் வீட்டில் செய்யப்படுகின்றன. இந்த நாளில் வீட்டை சுத்தமாக வைத்திருக்கப் பழக்கப்படுத்தினார்கள். தலைக்கு குளிப்பதும் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதும் வழக்கமாயிற்று. ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, வரலட்சுமி பூஜை என்றெல்லாம் பூஜைகளும் புனஸ்காரங்களும் அமர்க்களப்பட, அதற்கேற்ற உணவு வகைகளைச் சமைத்துச் சாப்பிட…
இந்தியாவின் மிக முக்கியான ஆன்மீக தலம் என்றால் அது திருப்பதி ஏழுமலையான் கோயில். பணக்கார கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர். அப்படி உள்ளூர், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரினத்திலும், சிறப்பு கட்டண தரிசனத்திலும் பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்வர். விடுமுறை தினங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு பக்தர்கள் இங்கு வருகை புரிவர். அந்த வகையில் கடந்த 19-ம் தேதி மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுமார் 90,956பக்தர்கள் தரிசனம் செய்திருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில் 33,046பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி இருப்பதாகவும் உண்டியல் காணிக்கையாக ரூ.4.05கோடி செலுத்தப்பட்டு இருப்பதாகவும், அன்றைய தினம் 4.44லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப் போல, அதேபோல், 2 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றனர். 3 ஆயிரத்து 708 பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது 31…
ஆடி மாதம் என்றாலே பக்தி மாதம் எனலாம். பல கோயில்களில் ஆடி மாதங்களில் தான் அனைத்து விதமான திருவிழாக்களும் வரும். குறிப்பாக அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அதேப் போல பெண்கள் ஆடி மாதத்தில் பல விரதங்களையும் மேற்கொள்வர். ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதம், மங்களகவுர் விரதம் உள்ளிட்டவற்றோடு, ஔவையார் விரதமும் உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணத் தடை நீங்கவும், திருமணம் ஆனவர்கள் கணவனின் ஆயுள் நீடிக்கவும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தினை கடைபிடிக்கின்றனர். விரதத்திற்கு செவ்வாய் பிள்ளையார் விரதம், பாட்டி வழிபாடு என்பது உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு. குடும்ப நலன், திருமண வரம், மாங்கல்ய பலம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்காக வேண்டிக் கொண்டு பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள். ஆடி செவ்வாய் : ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு சுபிட்சம் அடையும். ஜாதக…
இந்தியாவில் உள்ள தொன்மியான வைணவ கோயிலில் ஒன்று, மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயில் இக்கோயில் தட்சிண துவாரகை என்றும் அழைக்கப்படுகிறது. தல வரலாறு : துவாபர யுகத்தில் கண்ணனின் அவதாரக் காட்சியைத் தரிசிக்க கோபிலா மற்றும் கோப்ரளய முனிவர்கள் துவாரகைக்குச் சென்றனர். ஆனால், பகவான் பூவுலகை நீத்ததை அறிந்து வருந்தினர். நாரதரின் அறிவுரைப்படி, அவர்கள் மன்னார்குடிக்கு வந்து கடும் தவம் புரிந்தனர். முனிவர்களின் தவத்திற்கு மகிழ்ந்த கண்ணன், முப்பத்தி இரண்டு வகையான திருக்கோலங்களில் அவர்களுக்குக் காட்சி கொடுத்தார். இராஜமன்னார்குடியில் எழிலோடு கம்பீரமாக அமைந்திருக்கும் இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கி.பி.1072-கி.பி. 1122 கட்டப்பட்டது. பின்னர் வந்த நாயக்க மன்னர்களான அச்சுதப்ப நாயகக்கர், விஜயராகவ நாயக்கர், செண்பகமன்னர் நாயக்கர் போன்றோர்களால் பிரகாரங்கள் கோபுரங்கன் மதில்கள் போன்றவை கட்டப்பெற்று ஏக்கர் பரப்பளவில் மூன்று உயர்ந்து அமைக்கப்பட்டது. ஸ்ரீ மணவாள மாமுனிகளால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலமாகும். கோயில் சிறப்பு : இக்கோயிலில் கருடாழ்வார் பெண் வடிவில்…
ஆடி வெள்ளியை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் வழிபாடு. நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபாடு நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். சனிக்கிழமை மாலை குடும்பத்துடன் வந்து பெரியபாளையத்தில் தங்கி காலையில் ஆடு, கோழி ஆகியவற்றை அம்மனுக்கு பலி கொடுத்து பொங்கல் படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்வது வாடிக்கை. அந்த வகையில் ஆடி வெள்ளியை முன்னிட்டு மஞ்சள் ஆடை அணிந்து பெண்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு படையெடுக்கின்றனர். தொடர்ந்து பவானி அம்மன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை…
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்கள் சுவாமி சன்னதியில் கொடியேறி திருவிழா நடைபெற்றாலும் ஆடி பூரத் திருவிழா ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆகியவை அம்பாள் சன்னதில் கொடியேறி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அந்த வகையில் அம்பாள் சன்னதியில் ஆடி பூரத் திருவிழா கொடியேறி நாள்தோறும் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு திருவீதி உலா நடந்து வந்தது ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டு யாகசாலை தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து செப்பு கேடயத்தில் சுவாமி சன்னதி வந்தடைந்த காந்திமதி அம்பாள் அங்கிருந்த செப்பு தேரில் சிறப்பு…
நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பழமையான வைணவ திருத்தலங்களில் ஒன்று ஸ்ரீ அழகிய மன்னார் இராஜகோபாலசுவாமி திருக்கோவில். இத் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வருகின்றது. ஆடி மாதம் என்பது ஆன்மீக ரீதியாகவும், இயற்கை ரீதியாகவும் மிகவும் புனிதமான மற்றும் சக்தி வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆடி மாத பிறப்பை முன்னிட்டு இன்று காலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் நடைபெற்றது. தொடா்ந்து மூலஸ்தானத்தின் முன் அமைந்துள்ள கருடன் சன்னதி முன்பு கோபூஜை நடைபெற்றது. பசுவுக்கும் கன்றுக்கும் புது வஸ்திரம் அணிவித்து ஸ்ரீசுக்தம் சொல்லி பூக்கள் மற்றும் குங்குமத்தால் அா்ச்சனை செய்யப்பட்டது. பின்னா் பால் நைவேத்யம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது. கோ பூஜை முடிந்ததம் பக்தா்கள் கோமாதாவை வலம் வந்து வணங்கி பசுக்களுக்கு பழங்கள், கீரைகள் வழங்கி வழிபட்டனா். பின்னா் ஸ்ரீராஜகோபாலருக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு ஸ்ரீரம்(பால்) ஸ்ரீசடாாி…
