Author: Editor 4 web

ஆடி மாதம் என்றாலே பக்தி மாதம் எனலாம். பல கோயில்களில் ஆடி மாதங்களில் தான் அனைத்து விதமான திருவிழாக்களும் வரும். குறிப்பாக அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அதேப் போல பெண்கள் ஆடி மாதத்தில் பல விரதங்களையும் மேற்கொள்வர். ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதம், மங்களகவுர் விரதம் உள்ளிட்டவற்றோடு, ஔவையார் விரதமும் உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணத் தடை நீங்கவும், திருமணம் ஆனவர்கள் கணவனின் ஆயுள் நீடிக்கவும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தினை கடைபிடிக்கின்றனர். விரதத்திற்கு செவ்வாய் பிள்ளையார் விரதம், பாட்டி வழிபாடு என்பது உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு. குடும்ப நலன், திருமண வரம், மாங்கல்ய பலம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்காக வேண்டிக் கொண்டு பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள். ஆடி செவ்வாய் :  ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு சுபிட்சம் அடையும். ஜாதக…

Read More

இந்தியாவில் உள்ள தொன்மியான வைணவ கோயிலில் ஒன்று, மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயில் இக்கோயில் தட்சிண துவாரகை என்றும் அழைக்கப்படுகிறது. தல வரலாறு : துவாபர யுகத்தில் கண்ணனின் அவதாரக் காட்சியைத் தரிசிக்க கோபிலா மற்றும் கோப்ரளய முனிவர்கள் துவாரகைக்குச் சென்றனர். ஆனால், பகவான் பூவுலகை நீத்ததை அறிந்து வருந்தினர். நாரதரின் அறிவுரைப்படி, அவர்கள் மன்னார்குடிக்கு வந்து கடும் தவம் புரிந்தனர். முனிவர்களின் தவத்திற்கு மகிழ்ந்த கண்ணன், முப்பத்தி இரண்டு வகையான திருக்கோலங்களில் அவர்களுக்குக் காட்சி கொடுத்தார். இராஜமன்னார்குடியில் எழிலோடு கம்பீரமாக அமைந்திருக்கும் இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கி.பி.1072-கி.பி. 1122 கட்டப்பட்டது. பின்னர் வந்த நாயக்க மன்னர்களான அச்சுதப்ப நாயகக்கர், விஜயராகவ நாயக்கர், செண்பகமன்னர் நாயக்கர் போன்றோர்களால் பிரகாரங்கள் கோபுரங்கன் மதில்கள் போன்றவை கட்டப்பெற்று ஏக்கர் பரப்பளவில் மூன்று உயர்ந்து அமைக்கப்பட்டது. ஸ்ரீ மணவாள மாமுனிகளால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலமாகும். கோயில் சிறப்பு : இக்கோயிலில் கருடாழ்வார் பெண் வடிவில்…

Read More

ஆடி வெள்ளியை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் வழிபாடு. நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபாடு நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். சனிக்கிழமை மாலை குடும்பத்துடன் வந்து பெரியபாளையத்தில் தங்கி காலையில் ஆடு, கோழி ஆகியவற்றை அம்மனுக்கு பலி கொடுத்து பொங்கல் படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்வது வாடிக்கை. அந்த வகையில் ஆடி வெள்ளியை முன்னிட்டு மஞ்சள் ஆடை அணிந்து பெண்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு படையெடுக்கின்றனர். தொடர்ந்து பவானி அம்மன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை…

Read More

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்கள் சுவாமி சன்னதியில் கொடியேறி திருவிழா நடைபெற்றாலும் ஆடி பூரத் திருவிழா ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆகியவை அம்பாள் சன்னதில் கொடியேறி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அந்த வகையில் அம்பாள் சன்னதியில் ஆடி பூரத் திருவிழா கொடியேறி நாள்தோறும் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு திருவீதி உலா நடந்து வந்தது ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டு யாகசாலை தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து செப்பு கேடயத்தில் சுவாமி சன்னதி வந்தடைந்த காந்திமதி அம்பாள் அங்கிருந்த செப்பு தேரில் சிறப்பு…

Read More

நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பழமையான வைணவ திருத்தலங்களில் ஒன்று ஸ்ரீ அழகிய மன்னார் இராஜகோபாலசுவாமி திருக்கோவில். இத் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வருகின்றது. ஆடி மாதம் என்பது ஆன்மீக ரீதியாகவும், இயற்கை ரீதியாகவும் மிகவும் புனிதமான மற்றும் சக்தி வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆடி மாத பிறப்பை முன்னிட்டு இன்று காலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் நடைபெற்றது. தொடா்ந்து மூலஸ்தானத்தின் முன் அமைந்துள்ள கருடன் சன்னதி முன்பு கோபூஜை நடைபெற்றது. பசுவுக்கும் கன்றுக்கும் புது வஸ்திரம் அணிவித்து ஸ்ரீசுக்தம் சொல்லி பூக்கள் மற்றும் குங்குமத்தால் அா்ச்சனை செய்யப்பட்டது. பின்னா் பால் நைவேத்யம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது. கோ பூஜை முடிந்ததம் பக்தா்கள் கோமாதாவை வலம் வந்து வணங்கி பசுக்களுக்கு பழங்கள், கீரைகள் வழங்கி வழிபட்டனா். பின்னா் ஸ்ரீராஜகோபாலருக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு ஸ்ரீரம்(பால்) ஸ்ரீசடாாி…

Read More

திருப்பத்தூர் மாவட்டம் பசலிகுட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய முருகர் கோயிலில், ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்படுவதால், திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து முருகப் பெருமானை வழிபட்டனர். தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காகவும், நிறைவேற வேண்டியும் பக்தர்கள் காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், மொட்டை அடித்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வேண்டுதல் மாலை அணிவித்து முருகப் பெருமானை தரிசித்து வழிபட்டனர். மேலும், இவ்விசேஷ நாளை முன்னிட்டு சிவன்–பார்வதி வேடமணிந்த கலைஞர்கள் ஆன்மிக நடன நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களை வெகுவாகக்…

Read More

திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு எட்டாவது நாள் இரவு உற்சவத்தில், சின்ன நடராஜர் மற்றும் பராசக்தி அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக மகா தீபாரதனை நடைபெற்றது. அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 8 ஆம் தேதி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் அம்பாளுடன் சந்திரசேகரர் கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருவது வழக்கம். அதன்படி எட்டாவது நாள் இரவு உற்சவத்தில் சின்ன நடராஜர் மற்றும் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள்…

Read More

மாவட்டத்தில் கோயில்கள் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் மாவட்டம் முழுவதுமே கோயில்களாக இருக்கும் என்றால் அது திருச்சியில் தான். இங்கு ரெங்கநாதர் கோயில், மலைக்கோட்டை மட்டுமின்றி அம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலும் ஒன்று. கண்ணனூர் என அழைக்கப்படும் இந்த இடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. தல வரலாறு : கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரித்தனர். பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின. தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையைக் கொல்ல மேலே தூக்கினான். அக்குழந்தை அவன் கைகளிலிருந்து மேலே எழும்பி, வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களைத் தரித்துத் தோன்றினாள். அத்தேவியே மகா மாரியம்மன் என்று அழைக்கப்பட்டாள். மக்களின் தீமைகளையும், தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும்…

Read More

திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக இங்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருவதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இலவச தரிசனத்தில் 20 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். ரூ.300 சிறப்பு தரிசனத்திலும் குறைந்தது 4 மணி நேரமாவது காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் கோயிலில் அவதியடைந்து வருகின்றனர். நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால் உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் முதியோர்கள் சாமி தரிசனம் செய்ய சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் 30 நிமிடங்களில் ஏழுமலையான தரிசிக்க இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தினமும் காலை 10 மணி முதல் மாலை…

Read More

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் பெருவுடையார் திருக்கோயிலில் தனி சன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் உள்ள மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் மஹாகணபதி ஹோமத்துடன் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து வராஹி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் என பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதற்கு முன்னர் சிறப்பு யாகம் செய்யப்பட்டு புனித நீரினை வராஹி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பத்து நாட்கள் நடைபெறும் ஆஷாட நவராத்திரி விழாவில் இன்று இனிப்பு…

Read More