Author: Editor 4 web

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் பெருவுடையார் திருக்கோயிலில் தனி சன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் உள்ள மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் மஹாகணபதி ஹோமத்துடன் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து வராஹி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் என பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதற்கு முன்னர் சிறப்பு யாகம் செய்யப்பட்டு புனித நீரினை வராஹி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பத்து நாட்கள் நடைபெறும் ஆஷாட நவராத்திரி விழாவில் இன்று இனிப்பு…

Read More

யோகினி ஏகாதசி : இந்து சாஸ்திரங்களின்படி, யோகினி ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் அறிந்த மற்றும் அறியாத அனைத்து பாவங்களும் நீங்கும், நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். இறுதியில் மோட்சத்தை அடைவதற்கான பாதை எளிதாகும் என்று நம்பப்படுகிறது. விரதமும், நன்மையும் : பஞ்சாங்கத்தின்படி யோகினி ஏகாதசி விரதம் நாளை (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. ஏகாதசி திதி நாளை காலை 8:16 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் அதிகாலை 5:22 மணிக்கு முடிவடைகிறது. இந்து மரபின்படி, சூரிய உதய நேரத்தில் இருக்கும் திதிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் நாளை யோகினி ஏகாதசி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதம் பாவ விமோசனத்தை மட்டுமல்லாமல், வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மன அமைதியையும் தருகிறது. யோகினி ஏகாதசி நாளில் பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து, புனித நீராடி, விரதம் தொடங்க வேண்டும். பின்னர், பூஜை அறையில் மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி சிலை அல்லது படத்தை வைத்து பக்தியுடன் வழிப்பட வேண்டும். வழிபாட்டு…

Read More

திருவாரூர் அருகே புகழ்பெற்றா என்கண் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். சிவபெருமான், பெருமாள், பிரம்மா மற்றும் முருகப்பெருமான் ஆகிய நான்கு தெய்வங்களும் ஒரே தலத்தில் அருள்பாலிக்கும் அரிய திருத்தலமாக இது போற்றப்படுகிறது. கண் நோய்கள் நீங்கவும், இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கவும் , இத்தலத்தில் வழிபட்டால் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது , இரண்டாம் குலோத்துங்கசோழன் காலத்தில் கட்டப்பட்ட இத்தலத்தை அருணகிரிநாதரும் தனது திருப்புகழில் போற்றிப்பாடியுள்ளார். தமிழ்கடவுளான முருகபெருமான் உள்ள சிக்கல், பொரவாச்சேரியில் கட்டை விரலையும், எட்டுக்குடியில் தன் கண்களையும் முத்தரச சோழனால் பறிக்கப்பட்ட பவித்திரமாணிக்கம் என்ற சிற்பம் வடிவமைக்கும் முனிவர் கண், கட்டைவிரல் இன்றி எண்ணமேகண்ணாக கொண்டு முருகப்பெருமானை வடிவமைத்ததால் முருகனுக்கு கண் திறக்கும் நேரத்தில் முருகப்பெருமானால் சிற்பி பவித்திரமாணிக்கம் கண் பார்வை கிடைக்கப்பெற்றதால் என்கண் முருகன் திருக்கோவில் என்ற பெயர் சூட்டப்பட்டதாக ஐதீகம். சிறப்புகள்…

Read More

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாறு காணாத அளவில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால், இலவச தரிசன டோக்கன் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இலவசமாக தரிசனம் செய்யும் பக்தர்கள் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக திருப்பதி கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த 7-ம் தேதி 80,706 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று 82 ஆயிரத்து 172 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 978 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.5 கோடியே 15 லட்சம் செலுத்தப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு சுமார் 4லட்சத்து 25 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து…

Read More

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் – காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஒன்றாகும். பழைமையும் சிறப்பும் வாய்ந்த இத்திருக்கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதில் அன்னை காந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூரத் திருவிழா மற்றும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாக்கள் முக்கியமானவை. அதன்படி இந்த ஆண்டுக்கான ஸ்ரீ காந்திமதி அம்பாளுக்கு ஆடி பூரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது, இத்திருவிழாவிற்காக ஸ்ரீ காந்திமதி அம்பாள் சுவாமி சன்னதியில் இருந்து வெள்ளி சப்பரத்தில் கடந்த புதன்கிழமை மாலை தன் வீடான அம்பாள் சன்னதிக்கு ஏழுந்தருளினார். ஆடிப்பூர திருவிழா கொடிஏற்ற தினமான இன்று அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் வழிபாடு கோ பூஜை மற்றும் கணபதிஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. கொடிமரம் முன்பாக அஸ்திரதேவி வைத்து நவகலசங்கள் வைத்து வழிபாடு நடைபெற்றது. கொடிப்பட்டம் திருக்கோயிலுக்குள் உலா வந்தது. அம்பாள் சன்னதி உற்சவர் மண்டபத்தில்…

Read More

ஒருவர் பக்தி பழம் என்பதை கண்டறிவதற்கு அவரது நெற்றியில் திருநீறு இருந்தாலே போதும். அதிலும் பட்டையடித்து இருந்தால் அவருக்கு ஒன்றுமே தெரியாது அவர் ஆன்மீகத்தில் மூழ்கியவர் என அனைவரும் அவரை அடையாளப்படுத்துவர். அப்படி இருக்கையில் ஒவ்வொரு கோயில்களிலும் பிரசாதமாக திருநீறு கொடுக்கப்படுவதன் வரலாறு என்ன? இன்றைய காலகட்டத்தில் விபூதி இடுவது என்பது மூடநம்பிக்கையாகவும், ஸ்டைலாகவும் மாறிவிட்டது. தன்னை ஒரு நல்லவர் என அடையாளப்படுத்துவதற்காக வைக்கப்படும் ஒரு அடையாளம் என்று ஆகிவிட்டது. ஆனால் சைவை சமயத்தின் அடையாளமாக விளங்கியது இந்த விபூதி. ‘மந்திரமாவது நீறு’ என்று திருஞானசம்பந்தர் போற்றிய இந்த திருநீற்றை நெற்றியில் அணிவதற்குப் பின்னால் இருக்கும் ஆன்மிகப் பின்னணியும், வியக்கத்தக்க அறிவியலும் உள்ளது. விபூதி என்பது நிலையற்ற உலக வாழ்க்கையையும், ‘மனிதன் இறுதியில் சாம்பல்தான்’ என்ற உண்மையையும் உணர்த்துகிறது. நெற்றியில் மூன்று கோடுகளாக (திரிபுண்டரம்) திருநீறு அணியும்போது, நம்மிடம் உள்ள ஆணவம், செய்த பாவவினைகள், உலகப் பேராசை (மாயை) ஆகிய தீய…

Read More

ஆனி பிரம்மோற்சவ விழாவை  முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில்   63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மாலை என இரு வேலைகளிலும் அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு கோயிலின் 4 மாட வீதிகளை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடைபெறும். இதில் ஒரு பகுதியாக சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான ஆடிமாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி பிரம்மோற்சவம் நடைபெறும். ஆனி…

Read More

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதால் நட்சத்திர முறைப்படி கடந்த வாரம் இக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து குடமுழுக்கு நடைபெற்ற ஆனி மாதம் 23-ம் தேதியான இன்று வருவதால், தமிழ் ஆண்டு கணக்குப்படி ஓராண்டு நிறைவு உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திங்களன்று காலையில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு சத்ரு சம்கார யாகபூஜை நடைபெற்றது. அன்று மாலையில் 1008 கலசங்கள் நிறுவப்பட்டு முதல்கால யாகபூஜையும் இன்று காலையில் இரண்டாம் கால யாகபூஜையும் அதனைத்தொடர்ந்து மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த நுற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Read More

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பரபரப்பான ஒரு சிட்டியாக இருந்தாலும் கூட, இங்கும் பல வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் உள்ளன. அப்படி சென்னையின் மையப்பகுதியான பாரிஸ் கார்னரில் உள்ள காளிகாம்பாள் கோயில் பற்றின வரலாற்றை பார்ப்போம்.. தல வரலாறு : காளிகாம்பாள் கோயில் 1640-ஆம் ஆண்டில் விஜயநகர பேரசின் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. முதலில் இந்த கோயில் தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டை இருக்கும் இடத்தில் அமைந்திருந்தது. அங்கு மீனவர்கள் அம்பிகையை “சென்னம்மன்” என்று வழிபட்டதாகவும், அதிலிருந்து தான் “சென்னை” என்ற பெயர் வந்ததாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. 1672-ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடந்த போரின் போது, கோட்டைக்குள் இருந்த கோயில் இடிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அம்மனின் சிலையை பாதுகாப்பாக எடுத்து வந்து தற்போதுள்ள தம்பு செட்டி தெருவில் புதிய கோயிலை கட்டினர். அதுதான் இன்றைய காளிகாம்பாள் கோயில். சுமார் 400 ஆண்டுகள் பழமையானது இக்கோயில். ஆதிசங்கரர் வழிபாடு :…

Read More

பொதுவாக சனீஸ்வர பகவானுக்கு தனி பிரகாரம் கோயில் இருப்பது தனி சிறப்பு. அப்படி சனி பகவானக்கு என்று தனி கோயில் உள்ள ஆலயம் திருநள்ளாறு. காரைக்காலில் உள்ள இக்கோயிலுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் வருகை தந்து சிறப்பு பரிகாரங்கள் செய்வதுண்டு. அகஸ்தீஸ்வரர் கோயில் : தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் 9 நவகிரகங்களுக்கு என்று தனித் தனியே கோயில்களும் உண்டு. அந்த வகையில், கர்மபலனை அளிக்கும் சனீஸ்வரனுக்கு உரிய தலமாக, பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. தொண்டை மண்டலத்தில் உள்ள இக்கோயில் சோழர் காலத்தை சேர்ந்தது. இக்கோயிலின் கருவறையின் கோபுர அமைப்பு சோழர்காலத்து கட்டட அமைப்பை இன்றும் மிளிரச்செய்கிறது. தல வரலாறு : சிவன் பார்வதி இருவருக்கும் கைலாய மலையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு முப்பது முக்கோடி தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் என உலகத்து உயிர்கள் அனைவரும் கூடியிருந்தனர். அப்போது பாரம் தாங்காமல்…

Read More