காஞ்சிபுரம் காந்தி சாலையில் மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி மாதத்தில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டிற்கான உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, இன்று காலை கோவில் கொடிமரத்திற்கு வேதவிற்பன்னர்கள் வாயிலாக மந்திரங்கள் ஓதப்பட்டு, பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
அதை தொடர்ந்து, சப்பரத்தில் அம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா வந்தார். பிரமோற்ச்வத்தின் பத்து நாட்களும் காலை மற்றும் மாலை இரு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் வழக்கத்தீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
முக்கிய நிகழ்வான வரும் 19ஆம் தேதி காலை பூத வாகனமும், 21 ஆம் தேதி இரவு திருக்கல்யாணம் உற்சவம், 23ஆம் தேதி தேரோட்டமும், 29ஆம் தேதி இரவு ரிஷப வாகனத்துடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.
இந்நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது வெளி மாவட்ட மக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
