திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் ஆண்டு தோறும் நடைபெறும் ஆனி தேரோட்டத் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்டமான திருத்தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்ததை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

பக்தர்கள் “அரோகரா” முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி நகரின் நான்கு ரத வீதிகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை காவல்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version