திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற ஆடி சுவாதி பெருவிழாவின் ஒரு பகுதியாக, சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது
காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நடைபெற்ற இந்த வைபவத்தில், மங்கள வாத்தியங்கள் ஒலிக்கவும், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கவும் சீர்வரிசைகளுடன் திருமணம் வெகுவிமர்சையாக நடத்தப்பட்டது. கைலாயத்தில் தியாகராஜ சுவாமியின் உற்ற நண்பராகவும், 63 நாயன்மார்களில் ஒருவராகவும் விளங்கும் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணத்தை தியாகராஜ சுவாமியே நேரில் நின்று நடத்தியதாக ஐதீகம் நிலவுகிறது.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இந்த தெய்வீகத் திருக்கல்யாணத்தை நேரில் கண்டு தரிசனம் செய்தனர். மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து இந்த விழாவைச் சிறப்பித்தனர்.
