வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தீர்த்தமலையில் அமைந்து உள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா எனப் பக்திப் பெருக்குடன் முழங்கினர்.

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எஸ்.மோட்டூர் தீர்த்தமலை பகுதியில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவயானி சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில்  உள்ளது.

இக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கோயில் வளாகத்தில் யாகங்கள் அமைக்கப்பட்டு, வஸ்திரங்கள், தானிய வகைகள், மூலிகைப் பொருட்கள், வாசனை திரவியங்கள், மலர் வகைகள், பழ வகைகள் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் முழுங்க கோபுர கலசங்களுக்கு நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கும்பத்துக்கு பின்னர் தீப ஆராதனை நடைபெற்றது. அப்போது, புனித நீர் பக்தர்கள் மீது பைப் வழியாகத் தெளிக்கப்பட்டது. இதில் தமிழக மட்டுமல்லாது ஆந்திரா மாநிலத்தைச்  சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version