பொதுவாக ஒவ்வொரு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் அன்று அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். பால், மஞ்சள், சந்தனம், இளநீர், தேன், தயிர் என மங்களகரமான பொருட்களை கொண்டு ஒவ்வொரு நேரத்தில் அபிஷேகங்கள் நடைபெறும். அப்படி செய்யப்படக் கூடிய அபிஷேகங்களால் பக்தர்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள், பலன்கள் என்னென்ன? என்பதை விரிவாகப் பார்க்கலாம்..!

* தூய்மையான நீர் : தூய்மையான நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதை காண்பதாலும், அந்தத் தீர்த்தத்தைப் குடிப்பதாலும் மனம் சாந்தி அடையும்.

* நல்லெண்ணெய் : மூலவருக்கு நல்லெண்ண்ய் கொண்டு அபிஷேகம் செய்யும் போது பக்தி உணவு மேலோங்கும்.

* வாசனை திரவியங்கள் : நறுமணம் மிக்க வாசனை திறவியங்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் ஆரோக்கியமான வாழ்வு அமையும்.

* பசு நெய் : தூய்மையான பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் மோட்சம் கிடைக்கும்.

* பஞ்சாமிர்தம் : பழங்களால் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தால் உடல் பிணிகள் நீங்கி, நீடித்த ஆயுள் கிடைக்கும்.

* பசும்பால் : பசும் பாலால் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் போது, வம்ச விருத்தியும், ஆயுள் விருத்தியும் உண்டாகும்.

* தேன் : இறைவனுக்கு தேனை கொண்டு அபிஷேகம் செய்யும் போது, குரல் வளம் சிறக்கும்.

* தயிர் : குளிர்ந்த தயிரினால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும்.

* அரிசிமாவு : அரிசிமாவு பொடியைக் கொண்டு அபிஷேகம் செய்தால் பிறவிப் பிணி யாவும் அகலும்.

* இளநீர் : இளநீரால் அபிஷேகம் செய்யும் போது புத்திர பாக்கியம் கிடைக்கும்.

* பஞ்சகவ்யம் : பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்ய பாவ நிவர்த்தி ஏற்படும்.

* திருநீறு : திருநீற்றால் அபிஷேகம் செய்ய, அறியாமை நீங்கி, மெய்ஞானம் உண்டாகும்.

* சந்தனம் : சந்தனத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட, இல்லத்தில் லட்சுமி கடாட்சமும், செல்வ வளமும் பெருகும்.

Share.
Leave A Reply

Exit mobile version