புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 40வது வருட பிரமோற்சவ விழா திருத்தேரோட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ பெருந்தேவி நாயிகா சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில். பிரசித்தி பெற்ற திருக்கோவிலில் நாற்பதாவது வருட பிரமோற்சவ விழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் பெருமாள் பல்வேறு வாகன சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார்.
முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பெருமாள் தாயாருடன் திருத்தேரில் வைக்கப்பட்டு கோவிந்தா கோவிந்தா கோசத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த திருத்தேரோட்டத்தில் சுற்றுப்புறத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டு சென்றனர்.

