Author: Editor web1
ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் வாழ்வில் பொருளாதார நிலை, குடும்பம், வாக்கு மற்றும் உணவு முறை ஆகியவற்றைக் 2-ம் பாவம் (தன ஸ்தானம்) வைத்தே அறிய முடியும். அத்தகைய 2-ம் பாவகத்தின் காரகங்கள், அந்த பாவகத்தின் சாதக மற்றும் பாதகமான அம்சங்கள், ஒன்பது கிரகங்களும், 2-ம் பாவகத்தில் இருக்கும் போது கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம். 2-ம் பாவகத்தின் காரகங்கள்: ஜாதகரின் பணம், அசையும் சொத்துக்கள், வங்கி சேமிப்பு ஆகிய பொருளாதார சூழலை 2-ம் பாவகம் குறிக்கும். குடும்ப உறுப்பினர்கள், குடும்ப உறவு முறை, பேச்சுத்திறன், வாக்கு சாதுரியம், சொல்லும் வார்த்தைகளின் உண்மைத்தன்மை ஆகியவையும் 2-ம் பாவகத்தின் காரங்களாகும். ஒருவரின் உண்ணும் உணவு மற்றும் உணவு பழக்க வழக்கங்களும் 2-ம் பாவகத்தை வைத்தே அறியலாம். முகத்தின் பொலிவு, கண் (குறிப்பாக வலது கண்), வாய், பற்கள் பற்றியும் ஜாதகரின் தொடக்கக் கல்வி பற்றியும் அறிய 2-ம் பாவகம் முக்கியம். சாதக -…
சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் நடைபெற்ற விநோதத் திருவிழா பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் 9ம் நாள் திருவிழாவில் திருத்தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. நான்கு ரத வீதியில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. இந்த பகுதியில் தென்னை விவசாயம் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் தங்களது நேர்த்திகடனாக 101, 201, 501, 1001, 2001, 5001 என பக்தர்கள் தேங்காய் உடைத்தும், குழந்தை வரம் வேண்டியவர்கள்,நோய் குணமடைய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனுக்காக காணிக்கையாக ஆயிரக்கணக்கான தேங்காய்களை தேரடிப் பணிகளில் வீசி எரிந்து உடைத்தனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்டோர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு தேங்காய்களை சேகரித்தனர். தேங்காய்களை உடைக்கும் சப்தம் சுமார் இரண்டு மணி நேரம் தேரடி படியில் எதிரொலித்தது. இவ்விழாவை காண லண்டன்,…
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் 95-வது திவ்ய தேசமாகவும், பாண்டிய நாட்டுத் திருப்பதிகளுள் மிக முக்கியத் தலமாகவும் விளங்குவது சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோயில் ஆகும். ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் எட்டெழுத்து (அஷ்டாட்சர) மந்திரத்தின் பலன் உலக மக்கள் அனைவரும் கிடைக்க வேண்டி, ராமானுஜர் இக்கோயில் கோபுரத்தின் மீதேறி பொதுமக்களுக்கு உபதேசித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலம் இதுவாகும். இரணியாட்சன் மற்றும் இரணியகசிபு ஆகிய அசுரர்களின் கொடுமைகளில் இருந்து தங்களைக் காக்குமாறு பிரம்மா, சிவன் மற்றும் முனிவர்கள் வைகுண்ட நாதனிடம் முறையிட்டனர். அசுரர்களுக்குத் தெரியாமல், அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி (கோஷ்டியாக) ஆலோசித்த இடமே இத்தலம் என புராணங்கள் கூறுகிறது. தேவர்கள் ‘கோஷ்டியாக’ கூடி விவாதித்த இடம் என்பதால் இது “திருக்கோஷ்டியூர்” (கடம்பவனம்) என்று அழைக்கப்படுகிறது. தேவர்களின் ஆலோசனையின்படி, பெருமாள் அசுரனை வதம் செய்ய எடுக்கப்போகும் ‘நரசிம்ம’ அவதாரத்தை…
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சக்தி பீட தலங்களில் முதன்மையானதாக விளங்கும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் கோடை காலம் நிறைவடைந்து வசந்த காலம் துவங்குவதை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் வசந்த உற்சவம் நடைபெறும். அந்த வகையில் கோடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து பராபவ ஆண்டுக்கான வசந்த உற்சவம் நடைபெற்றது. வசந்த உற்சவத்தை முன்னிட்டு காமாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பச்சைக் கரை சிகப்பு நிற பட்டு உடுத்தி, வைர வைடூரிய திருவாபரணங்கள் செண்பகப்பூ மல்லிகைப்பூ பன்னீர் பூ, மலர் மாலைகள் அணிவித்து, லட்சுமி சரஸ்வதி தேவியுடன், மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து, வண்ண வண்ண மலர்களாலும் காய்கறி பழங்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ண வண்ண மின் விளக்குகள் ஒளிர சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள செய்தனர். வசந்த உற்சவத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்திய…
புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 40வது வருட பிரமோற்சவ விழா திருத்தேரோட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ பெருந்தேவி நாயிகா சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில். பிரசித்தி பெற்ற திருக்கோவிலில் நாற்பதாவது வருட பிரமோற்சவ விழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் பெருமாள் பல்வேறு வாகன சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார். முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பெருமாள் தாயாருடன் திருத்தேரில் வைக்கப்பட்டு கோவிந்தா கோவிந்தா கோசத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த திருத்தேரோட்டத்தில் சுற்றுப்புறத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டு சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே, பாகலூர் சாலையில் அமைந்துள்ள அழகன் மலையில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத அழகன் முருகன் திருக்கோயிலில், முதலாம் ஆண்டு வைகாசி விசாக பெருவிழா மிகச் சிறப்பாகத் நடந்தது. மங்களகரமான பராபவ வருடம், வைகாசி மாதம் 16-ஆம் நாளான இன்று, முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு, அதிகாலை முதல் அழகன் முருகனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை விமரிசையாக நடைபெற்றது. “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”, “வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை” என்ற பக்தர்களின் பக்தி முழக்கங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு ஒலிர, ஒட்டுமொத்த ஆலய வளாகமும் சிவமயமாகக் காட்சியளித்தது. விழாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. அழகன் மலை அழகன் முருகனின் திருவருளைப் பெற ஓசூர் மற்றும்…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கணமூர் கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதிக்குட்பட்ட கனமூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் மூலவரான லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாணம் ஒப்பத்தவாடி செல்வராஜ் கவுண்டர், ராஜலட்சுமி குடும்பத்தினர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதல் யாகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பத்துக்கும் மேற்பட்ட ஜீயர்கள் வேத மந்திரம் முழங்க, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில், மேள தாளங்கள் முழங்க லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கல்யாண நடைபெற்றது. இந்த திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் கணமூர், பர்கூர், கிருஷ்ணகிரி, நாட்றம்பள்ளி, ஒப்பத்தவாடி, பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இந்த கல்யாண உற்சவ நிகழ்ச்சியை விக்ரம்,…
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி முருகன் திருக்கோயில் கருவறைக்குள் பக்தர்கள் மேலாடை அணியாததற்கு வெறும் சடங்கு மட்டுமல்ல, அதற்குப் பின்னால் ஆழ்ந்த ஆன்மிக மற்றும் கலாச்சார அர்த்தங்கள் பொதிந்துள்ளன. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் கருவறைக்குள் செல்லும் போது மேலாடையைக் கழற்றிவிட்டுச் செல்லும் மரபு பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. இறைவனின் சந்நிதிக்குச் செல்லும் போது, பக்தன் தனது உலகியல் அந்தஸ்து, கவுரவம் மற்றும் அகங்காரத்தைத் துறந்து ஒரு சாதாரண மனிதனாக நிற்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம். தைக்கப்பட்ட ஆடைகள் சமூக அந்தஸ்தைக் குறிப்பதாகக் கருதப்படுவதால், அவற்றைக் களைவது “இறைவா, உனக்கு முன்னால் நான் வெறும் எளிய பக்தன் மட்டுமே” என்ற சரணாகதி நிலையை வெளிப்படுத்துகிறது. ஆகம விதிகளின்படி, இறைவழிபாட்டில் ‘தைக்கப்படாத’ ஆடைகளே (வேட்டி, துண்டு) புனிதமானதாகக் கருதப்படுகிறது. தைக்கப்பட்ட உடைகள் வியர்வையையும் அழுக்கையும் சேமிக்கக் கூடியவை என்பதால், ஆலயச்…
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் பிறந்த நட்சத்திரமாகக் கருதப்படும் வைகாசி விசாகத்தன்று, பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்வது தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். இதையொட்டி இன்று (மே 30) அதிகாலை 1 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து முருகப் பெருமானைத் தரிசித்தனர். தென்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டுள்ளன. வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கடந்த 28-ம் தேதி முதல்…
புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. காந்தி வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்தில், 40-வது ஆண்டு மகோத்ஸவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மே 30) வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ பராபவ வருஷத்திய 40-வது ஆண்டு மகோத்ஸவ விழா, கடந்த 22-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ரிஷப வாகனம், நாக வாகனம் மற்றும் பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மே 30) காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வேதபுரீஸ்வரர் எழுந்தருள, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் “ஓம் நமச்சிவாயா” எனும் முழக்கமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த இந்தத் தேர்…
