Author: Editor web1
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு 42-ம் ஆண்டு தீ மிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பல்வேறு வாசனை அபிஷேகப் பொருட்கள் மற்றும் 15 வகையான பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. உலக நன்மைக்காக யாக வேள்வி வளர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பெண்கள் தங்கள் குடும்பம் செல்வ செழிப்புடன் திகழவும், மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், 108 திருவிளக்கு பூஜை செய்து அம்மனை பக்தி சிரத்தையுடன் வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, அம்மனுக்கு பக்தர்கள் வேப்பம் சீலை சார்த்தும் நிகழ்வும், கூழ்வார்த்தல் விழாவும் நடைபெற்றது. பின்னர், அருகிலுள்ள திருக்குளத்தில் இருந்து கரகம் வர்ணிக்கப்பட்டு, கிராமத்து வீதிகளில் ஊர்வலமாக வலம் வந்தது. அப்போது வீடுகள் தோறும் ஏராளமான பொதுமக்கள் தேங்காய் உடைத்து, தீபாராதனை காட்டி அம்மனை வரவேற்றனர். திருவிழாவின் சிகர நிகழ்வாக,…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்திமிகு சாணாத்தி அம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மகா கும்பாபிஷேக விழா கடந்த 17-ம் தேதி முறைப்படி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களாக கணபதி பூஜை, கோ பூஜை, விசேஷ யாகசாலை பூஜைகள் மற்றும் மகா பூர்ணாஹுதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் வேத பண்டிதர்கள் முழங்கிய வேத மந்திரங்களுடன் பக்திப்பூர்வமாக நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக, நிர்ணயிக்கப்பட்ட சுப முகூர்த்தத்தில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கப் புறப்பாடாயின. பின்னர், கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கருவறையில் உள்ள ஸ்ரீ சக்திமிகு சாணாத்தி அம்மன் திருவுருவ சிலைக்கும் புனித நீராட்டம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் முறைப்படி நிறைவு பெற்றது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அம்மனுக்கு சிறப்பு மலர்…
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற கீழத்தெரு அருள்மிகு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா, இந்த ஆண்டும் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, வருகிற 27-ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி கோயிலில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க உற்சவ அம்மன் கோயிலின் உட்பிரகாரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், கோயில் கொடிமரம் அருகே அம்மன் எழுந்தருள, மங்கல வாத்தியங்கள் இசைக்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தனர். இந்தத் திருவிழாவில், நாளை முதல் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் மிக முக்கிய நிகழ்வாக, வரும் 27-ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்குத்…
சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். செயல்களில் வேகம் இருக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் அமையும். பண வரவு சீராக இருக்கும், இருப்பினும் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உடல் பிரச்சனைகள் சரியாகும். உணவு விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
பொருளாதார ரீதியாக சாதகமான நாள். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகள் லாபத்தைத் தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். பணம் கொடுக்கல், வாங்கல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
சற்று அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம். மனதை ஒருநிலைப்படுத்த தியானம் செய்வது நல்லது. தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் வரலாம். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் வசூலாகும். பெரியவர்களிடம் ஆலோசனைக் கேட்பது நன்மை தரும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை
குடும்ப உறவுகளில் சுமூகமான நிலை நிலவும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இது உகந்த நாள். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள்
செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வாகனப் பயணத்தின் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை இன்று முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்டாளிகளுடன் சுமூகமான உறவைப் பேணவும். நீண்ட நாள் இருந்த உடல் தொந்தரவு நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் வெற்றியைத் தரும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: நீலம்
