Author: Editor web1
வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் பல சிறப்பு தினங்கள் மற்றும் நாட்கள் வழிபடப் படுகிறது. அந்த வகையில், இந்து மத நம்பிக்கையில் கங்கை நதி சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வந்த நாள் கங்கா தசராவாக கொண்டாப்படுகிறது. நடப்பாண்டில் இந்த விழா நேற்று ( 25.05.2026) தொடங்கியது. அரும் 28-ம் தேதி வரை இவ்விழா கொண்டாட்டங்கள் நடைபெறும். இந்த புனித விழாவை ஒட்டி கங்கை மற்றும் அதன் கிளை நதியை ஒட்டிய புனித தளங்களில் மக்கள் வழிபாடு செய்து புனித நீராடுகின்றனர். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் காலையிலேயே ஏராளமான பக்தர்கள் திரண்டு நீராடி சாமி தரிசனம் செய்தனர். புத்வ மங்கல் எனப்படும் புனித செவ்வாய்க்கிழமையை ஒட்டி, திரிவேணி சங்கமத்தின் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க லேதே கோயிலில் அனுமனை வழிபட்டனர்.
கீழ்வேளூரை அடுத்த இரிஞ்சியூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில், வைகாசித் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த இரிஞ்சியூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில், வைகாசித் திருவிழா மே 22-ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காவடி எடுத்தல், மாவிளக்கு பூஜை மற்றும் அம்மன் வீதியுலா எனப் பல்வேறு நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான தீமிதி உற்சவம் மே 25ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், விரதமிருந்து காப்புக்கட்டிய 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். தீமிதி விழாவைத் தொடர்ந்து, அருள்மிகு செல்லமுத்து மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அம்மன் வீதியுலா காட்சியும் நடைபெற்றது. இதில், இரிஞ்சியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்…
ஜோதிட ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான குருப் பெயர்ச்சியை முன்னிட்டு, 2026-ம் ஆண்டு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்தார். ஜோதிட சாஸ்திரப்படி, நவக்கிரகங்களில் சுப கிரகமாகவும், ஞானம், செல்வம் மற்றும் புத்திர பாக்கியத்திற்கு காரகராகவும் திகழும் குரு பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது ‘குருப் பெயர்ச்சி’ என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசம் செய்துள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் தனது உச்ச வீடான கடகத்தில் உச்சம் பெறுவது மிகவும் சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது. குருப் பெயர்ச்சி சிறப்புப் பூஜைகள் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்கள் மற்றும் குரு ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குரு பகவானுக்கு பால், தயிர், தேன், நெய், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம்…
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம் ஆகும். மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையை பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். இதில் கார்த்திகை தீப திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பௌர்ணமி அன்றும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில், வைகாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் தற்போது அறிவித்துள்ளது. பௌர்ணமி வருகிற 30-ம் தேதி மதியம் 12.50 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ம் தேதி மதியம் 2.41 மணிக்கு நிறைவடைகிறது. பௌர்ணமி மட்டுமில்லாமல் 30-ம் தேதி வைகாசி விசாகமும் வருவதால், திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதனால்…
சின்ன மண்டலியில் பழமை வாய்ந்த ஆரூரம்மன் கோயிலில் வைகாசி ஜாத்திரை திருவிழாவில் கிராம மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த சின்ன மண்டலி கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆரூரம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வைகாசி மாத ஜாத்திரை திருவிழா கடந்த 17ஆம் தேதி காப்பு கட்டலுடன் துவங்கி ஏழு நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஆலய வளாகத்தில் கிராம மக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். இதையடுத்து விதவிதமான காய்கறிகள் மற்றும் பல்வேறு தானியங்களுடன் அம்மனுக்கு படையலிட்டு கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து விழாவின் சிறப்பம்சமாக ஜாத்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக மேளதாளம் முழங்க வீதிகளில் உலாவந்த ஆரூரம்மனை கிராம மக்கள் மஞ்சள் நீராட்டி உற்சாகத்துடன் வரவேற்றனர். இதனை தொடர்ந்து எட்டு நாட்களாக விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தேங்காயை தரையில் உருட்டியபடி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.பின்னர் கிராம…
2026-ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி நிகழும் குருப்பெயர்ச்சியில், குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு (தனது உச்ச வீடான கடகத்திற்கு) பெயர்ச்சி ஆகிறார். மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு (ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு) குருப்பெயர்ச்சி அடைகிறார். இது கன்னி ராசியினருக்குப் பல நற்பலன்களைத் தரும் ஒரு மிகச்சிறந்த காலமாகும். 11-ம் இடத்தில் அமரும் குரு, உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி, வருமான உயர்வு மற்றும் சமூக அந்தஸ்தை வாரி வழங்கப் போகிறார். பொதுப் பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்வதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் துரிதமாக முடியும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். மன நிம்மதியும், புதிய சொத்து சேர்க்கையும் உண்டாகும். சவால்கள் எல்லாவற்றிலும் அதிக நம்பிக்கை வைப்பதைத் தவிர்த்து, கவனமாக இருப்பது அவசியம். நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்களிடம்…
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். ஆரோக்கியத்தில் இருந்த தொந்தரவுகள் விலகும். புதிய திட்டங்களில் ஈடுபடும் போது தகுந்த ஆலோசனைகளைப் பெறுவது நன்மை தரும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகளைச் செய்ய அல்லது தொழிலை விரிவாக்கத் திட்டமிடலாம். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன கடன் தொடர்பான விஷயங்களில் தீர்வு கிடைக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள்
கடின உழைப்பிற்குப் பலன் கிடைக்கும். சமூகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கடினமான வேலைகளையும் சாமர்த்தியமாக முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உறவுகளிடம் பேசும் போது கவனத்துடன் இருப்பது அவசியம். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சமூகத்தில் உங்கள் பெயர் மற்றும் புகழ் உயரும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு கூடும். சுயதொழில் புரிபவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புண்டு. அதிர்ஷ்ட எண்கள்: 8, 5 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் நீலம், ஊதா
இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாகச் செயல்பட வேண்டும். அவசரமான முடிவுகளைத் தவிர்க்கவும். அமைதி காப்பது நலம் தரும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை மேற்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகள் அல்லது முதலீடுகளில் ஈடுபடுவதைத் தள்ளிப் போடுவது நல்லது. புதிய நபர்களை முழுமையாக நம்ப வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8, 4 அதிர்ஷ்ட நிறங்கள்: கருநீலம், அடர் பச்சை
சிலர் வலிய வந்து சண்டையிடலாம், அமைதி காப்பது நல்லது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசியல்வாதிகளுக்குத் தேவையான நிதியுதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வார்கள். மனக்குழப்பம் நீங்கும். உடல்நிலையில் இருந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பு பிறக்கும். அதிர்ஷ்ட எண்: 3, 7 அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
