Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»பக்தியின் அடையாளமாய் நெற்றில் பூசப்படும் திருநீறு..! ஏன்? எதற்காக? திருநீறு பூசுவதன் சிறப்பு என்ன?
Featured

பக்தியின் அடையாளமாய் நெற்றில் பூசப்படும் திருநீறு..! ஏன்? எதற்காக? திருநீறு பூசுவதன் சிறப்பு என்ன?

Editor 4 webBy Editor 4 webJuly 8, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
8
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ஒருவர் பக்தி பழம் என்பதை கண்டறிவதற்கு அவரது நெற்றியில் திருநீறு இருந்தாலே போதும். அதிலும் பட்டையடித்து இருந்தால் அவருக்கு ஒன்றுமே தெரியாது அவர் ஆன்மீகத்தில் மூழ்கியவர் என அனைவரும் அவரை அடையாளப்படுத்துவர். அப்படி இருக்கையில் ஒவ்வொரு கோயில்களிலும் பிரசாதமாக திருநீறு கொடுக்கப்படுவதன் வரலாறு என்ன?

இன்றைய காலகட்டத்தில் விபூதி இடுவது என்பது மூடநம்பிக்கையாகவும், ஸ்டைலாகவும் மாறிவிட்டது. தன்னை ஒரு நல்லவர் என அடையாளப்படுத்துவதற்காக வைக்கப்படும் ஒரு அடையாளம் என்று ஆகிவிட்டது. ஆனால் சைவை சமயத்தின் அடையாளமாக விளங்கியது இந்த விபூதி.

‘மந்திரமாவது நீறு’ என்று திருஞானசம்பந்தர் போற்றிய இந்த திருநீற்றை நெற்றியில் அணிவதற்குப் பின்னால் இருக்கும் ஆன்மிகப் பின்னணியும், வியக்கத்தக்க அறிவியலும் உள்ளது. விபூதி என்பது நிலையற்ற உலக வாழ்க்கையையும், ‘மனிதன் இறுதியில் சாம்பல்தான்’ என்ற உண்மையையும் உணர்த்துகிறது. நெற்றியில் மூன்று கோடுகளாக (திரிபுண்டரம்) திருநீறு அணியும்போது, நம்மிடம் உள்ள ஆணவம், செய்த பாவவினைகள், உலகப் பேராசை (மாயை) ஆகிய தீய குணங்களை நீக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. புருவ மத்தியான ஆக்ஞா சக்கரத்தில் விபூதி இடுவதால், தீய எண்ணங்கள், எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும்.

மன அழுத்தத்தைக் குறைத்து, நெற்றியை ஆன்மிகக் குளுமையோடு வைத்திருக்கும் இந்த திருநீறு, இறைவனின் பேரருளை ஈர்க்கும் சக்தியாக திகழ்கிறது.
நம் இரு புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதி (ஆக்ஞா சக்கரம்), அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் இடமாகும். அங்கு விபூதி வைக்கும்போது, உடலின் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவதோடு, தலைவலி, சைனஸ், சளி போன்ற தொல்லைகள் வராமல் தடுக்கிறது. மேலும், இப்பகுதியின் பின்புறம் அமைந்துள்ள ‘பீனியல்’ சுரப்பியைத் தூண்டி, நல்ல உறக்கத்திற்கு வித்திடுகிறது. முக்கியமாக, நெற்றிப் பகுதியில் உள்ள மிக நுட்பமான நரம்புகளைத் தூண்டுவ தன் மூலம் மனதை ஒருமுகப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleபழனி மலைக்கோயில் வரலாற்று சாதனை!. முதன்முறையாக ரூ.100 கோடியை கடந்த வருவாய்!
Next Article 🙏 நினைத்தாலே அருள் தரும் கரூர் மாரியம்மன்.. கவலைகள் நீங்கி ஆனந்த வாழ்வு பெறும் ரகசியம்..!!
Editor 4 web

Related Posts

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

July 20, 2026

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

July 20, 2026

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

July 20, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

சோளிங்கர்; மகா முனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை – பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்!

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு

Trending Posts

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

July 20, 2026

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

July 20, 2026

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

July 20, 2026

சோளிங்கர்; மகா முனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை – பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்!

July 19, 2026

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு

July 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.