நாக தோஷமும், கேது தோஷமும் இருப்பவர்கள் கீழ்க்கண்ட திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.

காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீமாகாளேஸ்வரர் கோயிலில் ராகுவும், கேதுவும் மனித உருவில் காட்சியளிக்கின்றனர். இவர்களை செவ்வாய், வெள்ளி, ஞாற்று கிழமைகளில் ராகு காலத்தில் வழிபட்டால் தோழ நிவர்த்தி பெறலாம். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரில் உள்ள மூலவர் நாகநாதர் அம்பாள் பிரகதாம்பாள் ஆலயம் நாக தோஷத்தை நீக்க கூடியது. இதே பேரையூரில் இருக்கும் நாகநாதர் சுவாமியை தரிசித்தாலும் தோஷ பலனை அடையலாம்.

இங்கு போக முடியவில்லை என்றால் திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணங்குடி பகுதியில் இருக்கும் ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஆலயமும் ராகு கேதுவுக்கு சிறந்த பரிகாரத் தலமாகும். இதே மாவட்டத்தில் இருக்கும் பாமணி தலத்தில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் நாதநாதரை வழிபடலாம். இங்குள்ள ஆதிசேஷனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நாகதோஷமும், கேது தோஷமும் நிவர்த்தி அடையலாம்.

நாகை மாவட்டத்தில் உள்ள நாகநாத சுவாமி, திரும்பரத்தில் உள்ள சௌந்தரநாயகி அம்பாள் சமேத அனந்தீஸ்வரர் ஆலயம், திருச்சியில் உள்ள ஸ்ரீநாகநாதர் தலம், சீர்காழியில் உள்ள நாகேஸ்வரமுடையார் கோவிலும் நாகதோஷத்தையும், கேது தோஷத்தையும் நீக்க கூடியது.

Share.
Leave A Reply

Exit mobile version