உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனையொட்டி நேற்று காலை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் கோயிலை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
அதிகாலை சுப்ரபாதம், தோமாலை சேவை, கொலு மற்றும் பஞ்சாங்க சிராணம் உள்ளிட்ட ஐபவங்கள் நடைபெற்றது. தொடர்ந்து 7 மணியில் தொடங்கிய தூய்மைப்பணி, காலை 9 மணி வரை நடைபெற்றது. அப்போது கோயில் வளாகம் மற்றும் பூஜைப் பொருட்கள் ஆகிய அனைத்தும் புனித நீரால் தூய்மைப்படுத்தப்பட்டது. தூய்மைப் பணி முடிந்ததும் பாரம்பரிய மூலப்பொருட்கள் கலந்த புனித நறுமண நீர் கோயில் வளாகம் முழுஅதும் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து காலை 9.30 மணியில் இருந்து பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர். ஆழ்வார் திருமஞ்சன நிகழ்வில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

