புதுச்சேரி சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி பரிகார வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா சக்தி பரிகார வராகி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், குங்குமம், பன்னீர் மற்றும் கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பாராயணம் பாடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அலங்காரத்தில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு வராகி அம்மனை வழிபட்டு சென்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version