சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழா சிவ வாத்தியங்கள் வாசிக்க வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் துவங்கியது.
பஞ்சபூத தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தேரோட்ட தரிசன விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமான் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து சிவ வாத்தியங்கள் ஒளிக்க வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் ராஜி தீட்சிதர் ரிஷப கொடியை ஏற்றி வைத்தார் இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிவசிவா கோஷங்களை எழுப்பி நடராஜமூர்த்தியை தரிசனம் செய்தனர்.
இன்று தொடங்கும் விழாவானது வரும் 10 நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
குறிப்பாக 14ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலாவும், 15ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகன விதி உலாவும், 16ஆம் தேதி வெள்ளி பூத வாகன வீதி உலாவும், 17ஆம் தேதி தொருவடச்சான் நடைபெறுகிறது,
முக்கிய விழாவான தேரோட்டம் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து 22 ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஸ்ரீ ,சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது,
அதனைத் தொடர்ந்து சித் சபையில் ரகசிய பூஜையும் பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் 3 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும் ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
குறிப்பாக இத்திருக்கோவிலில் ஆண்டுக்கு 6 முறை நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறும்,
ஆனால் மார்கழி மாதத்தில் ஆருத்ர தரிசன விழாவிலும் ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன விழாவிலும் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி தயார் கருவறையில் இருந்து வேளியே வந்து நான்கு ரத வீதிகளில் விதிவுலா வந்து தரிசனம் அளிப்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி பிரதீப் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

