திருவாரூர் அருகே புகழ்பெற்றா என்கண் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
சிவபெருமான், பெருமாள், பிரம்மா மற்றும் முருகப்பெருமான் ஆகிய நான்கு தெய்வங்களும் ஒரே தலத்தில் அருள்பாலிக்கும் அரிய திருத்தலமாக இது போற்றப்படுகிறது. கண் நோய்கள் நீங்கவும், இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கவும் , இத்தலத்தில் வழிபட்டால் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது , இரண்டாம் குலோத்துங்கசோழன் காலத்தில் கட்டப்பட்ட இத்தலத்தை அருணகிரிநாதரும் தனது திருப்புகழில் போற்றிப்பாடியுள்ளார்.
தமிழ்கடவுளான முருகபெருமான் உள்ள சிக்கல், பொரவாச்சேரியில் கட்டை விரலையும், எட்டுக்குடியில் தன் கண்களையும் முத்தரச சோழனால் பறிக்கப்பட்ட பவித்திரமாணிக்கம் என்ற சிற்பம் வடிவமைக்கும் முனிவர் கண், கட்டைவிரல் இன்றி
எண்ணமேகண்ணாக கொண்டு முருகப்பெருமானை வடிவமைத்ததால் முருகனுக்கு கண் திறக்கும் நேரத்தில் முருகப்பெருமானால் சிற்பி பவித்திரமாணிக்கம் கண் பார்வை கிடைக்கப்பெற்றதால் என்கண் முருகன் திருக்கோவில் என்ற பெயர் சூட்டப்பட்டதாக ஐதீகம்.
சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் குடமுழுக்கு விழா இன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
இன்று யாகசாலையில் ஆறாவது காலபூஜை நடைபெற்று சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசத்தை சுமந்து கோயிலை வலம் வந்த பின்னர் மங்கலஇசை வாத்தியத்துடன் எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. புனிதநீரானது ராட்சச டிரோன்கள் மூலம் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.

