திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புகழ்பெற்ற மிகவும் பழைமையான நல்லாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதன் தொடக்க நிகழ்வாககடந்த 7 ம் தேதி காப்பு கட்டப்பட்டதை அடுத்து இன்று காலை பால்குட விழா நடைபெற்றது. அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் தாரை தப்பட்டை முழங்க, குதிரை நடனத்துடன் பக்தர்கள் பால்குட மெடுத்து ஊர்வலமாக வந்தனர்.

நல்லாண்டவர் கோவிலை வந்தடைந்ததும் மான்பூண்டி நல்லாண்டவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்ற பின் பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஆடி முதல் வெள்ளியான இன்று நல்லாண்டவருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு சுவாமி திருத்தேரில் உட்சுற்று உலா நடைபெற உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version