Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் சூடம் ஏற்றி பக்தி பரவசம்!
Featured

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் சூடம் ஏற்றி பக்தி பரவசம்!

Editor web1By Editor web1July 15, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
vlcsnap 2026 07 15 08h09m00s318
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயத்தில், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், ஆனி அமாவாசை தினமான நேற்று (ஜூலை 14) அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு நெய், தயிர், சந்தனம், வாசனை திரவியங்கள் மற்றும் பல வண்ண மலர்களால் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன.

vlcsnap 2026 07 15 08h08m47s587

இதனைத்தொடர்ந்து, உற்சவர் அங்காளம்மன் ‘ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி’ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அமாவாசை தினம் என்பதால் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான ஊஞ்சல் உற்சவம் இரவு 11 மணியளவில் தொடங்கியது. உற்சவர் அம்மனைத் தங்களது தோள்களில் சுமந்து, வடக்கு வாயில் எதிரே உள்ள ஊஞ்சல் மேடைக்குக் கொண்டு வந்தனர்.

அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து, தாலாட்டுப் பாடல்களைப் பாடி ஊஞ்சலை அசைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், தங்களது கைகளில் கற்பூரம் ஏற்றி, “அங்காளம்மா தாயே… அருள்புரிவாயே!” என பக்தி முழக்கமிட்டு பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மேல்மலையனூருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleவல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கத்துடன் வழிபாடு!
Next Article காரிகோட்டை பொன்னியம்மன் கோவில் திருவிழா!. திரளான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வைபவம்!
Editor web1
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.