ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் இன்று “ஆடி பரணி” கிருத்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு மூலவர் பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம், விபூதி, உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வைரவேல் சேவல் கொடியுடன் தங்க ஆபரண அலங்காரத்தில் கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆடி பரணி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் வேல் குத்திக்கொண்டும் கோவிலுக்கு வருகை தந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர் மேலும் ஆடி பரணி தினத்தை முன்னிட்டு ரத்தனகிரி சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி ஆற்காடு, வாலாஜா, வேலூர், ராணிப்பேட்டை, பூட்டதாக்கு, கலவை, திமிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டு 500 படிகளை ஏரியபடி நீண்ட வரிசையில் காத்திருந்தபடி முருகப்பெருமானை மனதில் நினைத்து அரோகரா அரோகரா என பக்தி கோஷங்களை வெளிப்படுத்தி சுவாமியை வழிபட்டு சென்றனர்.
