நாமக்கல் மாவட்டத்தின் அடையாளமாய் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில். இங்கு நேற்று வைகாசி மாத கடைசி சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தயிர், எண்ணெய், பஞ்சாமிர்தம் மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் தங்க கவச அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version