வார விடுமுறை என்றாலே மக்கள் கோயில்களுக்கோ, சுற்றுலா தலங்களுக்கோ படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் வார இறுதி நாட்களை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது.

பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி, நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version