நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியில் உள்ளது புகழ்பெற்ற புனித அந்தோணியார் ஆலயம். இங்கு ஆண்டுதோறும் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்,
புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தோணியார் சொரூபம் ஆலயத்தின் வளாகத்தில் துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
திருப்பலியைத் தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு அலங்கார பெரிய தேர் பவனி ஜூன் 6-ம் தேதி நடைபெறுகிறது.
