திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் பல பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. அந்த வகையில் முசிறி பரிசல் துறை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீபால தண்டாயுதபாணி திருக்கோயில்
இக்கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக அணுக்ஞை, விநாயகர் வழிபாடு வாஸ்து சாந்தி பூஜைகளும், இரண்டாம் நாள் யாக பூஜை மற்றும் தீபாரதனையும், மூன்றாம் நாள் காலை யாக பூஜை வேதிகார்ச்சனை, மண்டப பூஜைகள், திரவ்ய ஹோமம் பூர்ணாஹூதி, தீபாரதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து நான்காம் கால யாக பூஜைகள் திரவ்ய ஹோமம், மகா பூர்ணா ஹூதி தீபாராதனையும், இதனைத் தொடர்ந்து விமானம், மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி எனும் கும்பாபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் பரம்பரை அறங்காவலர்கள், நிர்வாகம், முருகனடியார்கள், இறை அன்பர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

