ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் செயல்பட்டு வரும் சௌராஷ்ட்ரா ஓம் முருகா புஷ்ப காவடி சங்கத்தின் சார்பில், முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக போற்றப்படும் ஆடிக்கிருத்திகை பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகள் பக்தி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிலையில் வரும் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு தினந்தோறும் அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் மஹா தீபாராதனைகள் மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று செவ்வாய்க்கிழமை என்பதாலும், முருகப்பெருமானுக்கு மிகவும் சிறப்புமிக்க நாளாக கருதப்படுவதாலும், காலை முதலே பக்தர்கள் திரளாகக் கோவிலுக்கு வருகை தந்து சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற பின்னர் பல்வேறு பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான ஓம் முருகா புஷ்பர் காவடி சங்கத்தினர் “அரோகரா” என்ற பக்தி முழக்கங்களை எழுப்பி சுவாமியை வழிபட்டனர்..
பிறகு இரவு சௌராஷ்ட்ரா ஓம் முருகா புஷ்ப காவடி சங்கத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு முருகப்பெருமானின் திருப்புகழ் பாடல்களை இசையுடன் பாடியபடி, பக்தி உணர்வோடு நடனமாடி ஆன்மிக பரவசத்தில் ஈடுபட்டனர் பக்தர்களின் திருப்புகழ் இசை, பக்தி முழக்கங்கள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் அந்த பகுதியையே பக்தி மணம் கமழச் செய்தன இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், சௌராஷ்ட்ரா சமூகத்தினர் மற்றும் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெற்றனர்.
ஆடிக்கிருத்திகை பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பக்தி நிகழ்ச்சி வாலாஜாபேட்டை பகுதியில் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தியதுடன், பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர்.

