திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோவிலில் மகா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
செங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மகா கருட சேவை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
ஏழாம் நாள் திருவிழாவான இன்று மகா தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி சுவாமி, வீதியுலா வந்தார்.
இந்த தேர் விழாவில், செங்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, “கோவிந்தா கோவிந்தா” முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.
பாதுகாப்புக்காக செங்கம் டி.எஸ்.பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் பணியில் ஈடுபட்டனர்.
