திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வேப்பில்லை மாரியம்மன் கோயில். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா நடைபெறும். அதன் படி இந்தாண்டின் சித்திரை திருவிழா கடந்த 3-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதியுலா வரும் வேடபாரி நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வேப்பிலை மாரியம்மன் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் குதிரை வாகனத்தில் எழுந்தருளியதும், கோயிலில் இருந்து தாரை, தப்பட்டை முழங்க பக்தர்களின் முழக்கத்துடன் வேடபரி புறப்பட்டது.

ராஜவீதிகள் வழியாக வலம் வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோயில் வெள்ளத்தில் அம்மன் மிதந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version