சித்தர்கள் என்பவர்கள் மனிதர்களை போன்றே உலகில் பிறந்தாலும் கூட, அவர்களது ஞானம் என்பது சாதாரண மனிதர்களை போல் அல்லாமல், தங்களுக்கென்று தனி வாழ்வியல் முறைகளை உருவாக்கி இயற்கையோடு இயற்கையான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஆவர்.

குறிப்பாக தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்தே வாழ்ந்திருந்தாலும், முதலில் அகத்தியர் பின் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர். இவரே தமிழ்ச் சித்தர் பரம்பரையின் தலைவராக விளங்குகின்றார். அவருக்குப்பின் காலந்தோறும் சித்தர்கள் பலர் ஆங்காங்கே தோன்றி வருகின்றனர்.

மருதாசல மருதம்மா சித்தர் :

இப்படி சித்தர்களாக வாழ்ந்து ஜீவசமாதி ஆனவர்கள் தான், ஈரோட்டில் உள்ள மருதாசல மருதம்மா சித்தர். சத்தியமங்கலம் அடுத்த தனவாசி ரோடு அம்மன் கோயில் தோட்டத்தில் அமைந்துள்ள இவர்களது சமஸ்தானத்தில், தவத்திரு கந்தசாமிகவுண்டர் அய்யா, தவத்திரு பூவாத்தாள் அம்மை பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றனர்.

சிலைகள் :

இங்கு நவகிரக கணபதி விநாயகர், பகவதி அம்மா சத்ய லோக பிரம்மா, சரஸ்வதி, பண்ணாரி அம்மன், மகா மகிமை கைலாச நாதர், தட்சிணாமூர்த்தி, லிங்கோபவர், அர்த்தனாரீஸ்வரர், மகா மகிமை மருதம்மா, பிருத்திங்காதேவி, 18 கை அம்மன் துர்கை தேவ சேனாபதி, திருச்செந்தூர் முருகப்பெருமான், அருள் மிகு ஸ்ரீ கங்காசல கல்கி, திருமலை சீனிவாசன், மகாலட்சுமி, பத்மாவதி, கால பைரவர், ஓம் ஸ்ரீ ஆஞ்ச நேயர், அருள் தரும் ஐயப்பன், வன்னி மர மகாசனி பகவான், காவல் தெய்வமாய் விளங்கும் கருப்பராய சுமாவி, கன்னிமார் தேவதைகள், 18 சித்தர்கள், வராகி தேவி ஆகிய சிலைகள் உள்ளன.

பலன்கள் :

கோவிலில் உள்ள வன்னி மரத்தை வணங்குவதால் வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும், நல்ல ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும், கல்வியில் சிறந்து விளங்கவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் உதவும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும், மன அமைதியை பெறவும் உதவுகிறது. இங்கு வரும் பக்தர்களின் மன குறைகளை அருள் மிகு மருதாசல மருதம்மா சித்தர்கள் போக்கி வருகின்றனர்.

கோயிலுக்கு தினசரி வரும் பக்தர்களின் திருமண தடை நீங்குகிறது. பக்தர்களின் குடும்பபிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது. குழந்தை பாக்கியம், செல்வம் செழிப்பு மற்றும் தீராத கடன் பிரச்சனை தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

பரிகாரம் :

சமஸ்தானம் சார்பில் ஜாதகம், கிரஹ பிரவேசம், கும்பாபிஷேகம், வாஸ்து போன்றவை செய்து தரப்படும். அனைத்து விதமான நோய்களுக்கும் பரிகாரம் செய்து தீர்வு காணப்படும்.

Share.
Leave A Reply

Exit mobile version