ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வைத்தியநாதசுவாமி வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. சிவபெருமான் வைத்தியநாத ஸ்வாமியாக எழுந்தருளி 24 திருவிளையாடல் புரிந்த ஸ்தலமாக உள்ள இக்கோவிலில் வைகாசி திருவிழா வெகு விமரிசியாக தொடர்ந்து வரும் நடைபெறுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் இந்த வருடத்திற்கான வைகாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.11 நாள் நடைபெறும் இத்திருவிழாவில் தினம் தோறும் சுவாமி மற்றும் அம்பாள் வெட்டிவேர்சப்புறம், கல்பாக்க விருட்சம், அம்சவாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் வரும் 27ஆம் தேதியும் அதனைத் தொடர்ந்து 29ஆம் தேதி ரத உற்சவம் எனப்படும் தேர் திருவிழாவும் நடைபெறும். முன்னதாக இன்று காலை நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சியில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்துள்ளனர் தொடர்ந்து குடிமகனத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு நந்தி பொறித்த கொடியானது கொடிமரத்தில் ஏற்றப்பட்டது அதனை தொடர்ந்து மா பொடி,மஞ்சள் பொடி, திரவிய பொடி,பால் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் கொடிமரத்திற்கு நடைபெற்றன. அதனை தொடர்ந்து தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றது இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

