Author: Editor TN Talks

ஒருவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைபாடுகள் மற்றும் உறவுகளின் இடையில் பல்வேறு பிரச்சனைகள் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும். எனவே ஒருவரின் வீட்டில் தீய சக்திகள் உள்ளது என்பதை உறுதி செய்வதற்கு, மூன்று பச்சை எலுமிச்சைப் பழங்கள் மட்டும் போதும். ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சையை வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அப்படி கூடையில் வைக்கும் போது 8 எலுமிச்சையை வைத்து, நடுவே ஒரு எலுமிச்சையை வைக்கவும். இப்படி செய்தால், நமது வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். நாம் அன்றாடம் வேலை செய்யும் இடம் அல்லது படிக்கும் இடங்களில் உள்ள மேஜையின் மீது 3 எலுமிச்சை பழத்தை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. மூன்று எலுமிச்சைப் பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி நமது வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைத்த பச்சை எலுமிச்சை மஞ்சள் அல்லது…

Read More

சபரிமலை செல்லும் ஐயப்பா பக்தர்கள் அனைவரும் அனுதினமும் நம் ஐயப்ப ஸ்வாமியை நினைத்து 108 சரண கோஷங்களை நாம் படிக்கலாம்… ஐயப்ப சாமியின் அருளை பெறுவோம்… 1.  ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 2. ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா 3. ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா 4. ஓம் சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா 5.  ஓம் மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா 6. ஓம் வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா 7. ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா 8. ஓம் பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 9. ஓம் சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 10. ஓம் வனதேவத மாறே சரணம் ஐயப்பா 11. ஓம் துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா 12. ஓம் அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா 13. ஓம்…

Read More

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத் தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். உடன் பிறந்தவர்கள் உதவியுடன் பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு. மிதுனம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் நிதானம் தேவை. லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் போட்டிகள் விலகும். பங்குதாரரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவது நன்மை பயக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். சிம்மம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு…

Read More

சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க கோவிந்தா கோஷங்களுடன் புறப்பட்ட திருப்பதி வெண்பட்டு திருக்குடைகள். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது, ஏழுமலையான் கருட சேவைக்கு தமிழக பக்தர்கள் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் புறப்பட்டது. உடுப்பி பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கி தொடங்கி வைத்தார். பெருமாளிடம் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகளை, திருப்பதி திருக்குடையிடம் பக்தர்கள் சமர்ப்பிப்பது வழக்கம். அது ஏழுமலையானை சென்றடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால்தான், திருப்பதி திருக்குடை ஊர்வல காலத்தில் சென்னையில் இருக்கும் பக்தர்கள், விரதம் இருந்து திருக்குடைகளை தரிசிக்கிறார்கள். ஆரத்தி காண்பித்து வழிபடுகிறார்கள். திருக்குடை ஊர்வலம் செல்லுமிடமெல்லாம் மங்களம் பெருகும், வறுமை…

Read More

தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவிலில் திருக்கல்யாணம் விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சுரபி நதிக்கரையில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் ஆடி மாதங்களில் பிரம்மோற்சவ ஆடி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருட திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கும் நீலாதேவிக்கும் திருக்கல்யாணம் விழா மிக விமர்சையாக நடைபெற்றது. விழாவில் சனீஸ்வர பகவானின் மனைவி நீலாதேவிக்கும் உருவம் கிடையாது என்பதால் கும்பத்தில் நீலாதேவி உருவம் அமைத்து,பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து கும்பத்திற்கு சனீஸ்வர பகவான் தாலிகட்டும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட நீலாதேவியின் உருவம் இன்றிலிருந்து சரியாக மூன்றாவது திங்கட்கிழமை அன்று சுரபி நதியில் கரைக்கப்படும். இந்த திருக்கல்யாண விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்தும்…

Read More

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபையில் பக்தர்கள் தரிசனத்துக்காக தீட்சிதர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்களா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தெந்த நேரத்தில் அனுமதிக்கப்படுவர், என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்த திட்டத்தை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில், கனகசபையின் மேற்கு பகுதியில் இருந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என முடிவெடுத்து, கடந்த…

Read More

கோவையில் புகழ்பெற்ற தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக குடமுழக்கு நடைபெற்றது. கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, நினைவுத் திருமஞ்சனம், எண் வகை மருந்து சாற்றுதல், இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு, திருமுறை, நாட்டிய விண்ணப்பம் உள்ளிட்டவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை திருப்பள்ளி எழுச்சி, மூல மூர்த்திகளுக்கு ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி, திருக்குடங்கள் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றதை தொடர்ந்து ராஜகோபுரம், விமானங்கள், பரிவாரங்கள், மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை…

Read More

காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் வெகு விமர்சையாக தொடங்குகியது. வரும் 10-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி திருவிழா மாங்கனி இரைத்தல் நடைபெற உள்ளது. காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த விழாவின் ஒருபகுதியாக கடந்த 7-ந் தேதி பரமதத்த செட்டியாருக்கும் புனிதவதியாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அன்று மாலையே ஸ்ரீ பிக்ஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடந்தேறியது. வரும் 10-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீ பிக்ஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாரதனை நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9:00 மணிக்கு பரமசிவன் அடியார் கோலத்துடன் பவழக்கால் விமானத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து…

Read More

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கு நடைபெற உள்ளது. தமிழ் மொழியில் நடத்த கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவின் போது யாகசாலை, கருவறை, கோபுரவிமான பூஜை ஆகியவற்றை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் தரப்பில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் இணை ஆணையர் பதில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, பன்னிரு திருமுறைகள் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது முதல்…

Read More

சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டத்தில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது, அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிய வழக்கு முடித்து வைத்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு. கேசவமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது . 2014 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது எனவும் அனைத்து சமூக மக்களையும் இணைத்து அவர்களது பங்களிப்புடன் திருவிழா நடைபெற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு புதிய தேரோட்டமும் திருவிழாவும் நடைபெற்றது. அப்போது அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. இருப்பினும் முதல் மரியாதை பெறுவதற்காக சில நாட்டார்கள் அவர்கள் சார்ந்த அதிக நபர்களை கூட்டிச் சென்று தேரின் வடத்தை பிடித்ததால்…

Read More