Author: Editor web2
சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 3மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இணந் ந்ல்ையல், செவ்வாய்க்கிழமையான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 3மணி…
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, எம். புத்தூர் ஊராட்சி சத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் மற்றும் புதிய மண்டபங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஸ்ரீ மகாமாரியம்மன், தக்ஷிணாமூர்த்தி, பாலமுருகன், வைஷ்ணவி, மகேஸ்வரி, வேம்படி கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த ஜூன் 18-ஆம் தேதி யாகசாலை அமைக்கும் நிகழ்வுடன் விழா தொடங்கியது. தீர்த்தக்குடம் எடுத்துவருதல், முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, தினமும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றன. இன்று யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த பின்னர், திருக்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ மகாமாரியம்மன் மற்றும்…
ஏழுமலையான் உறையும் புண்ணிய பூமியான திருமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயத்தில், ஆண்டுதோறும் மிக விமரிசையாக நடத்தப்படும் ‘ஜ்யேஷ்டாபிஷேகம்’ உற்சவம் இந்த ஆண்டும் பக்திப் பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்று நிறைவுற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த அரிய மற்றும் சிறப்பு வாய்ந்த உற்சவம் மொத்தம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, ஆலயத்தின் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுக்கு விசேஷ ஆராதனைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான வேத விற்பன்னர்கள் அக்னி ஹோத்ரம் வளர்த்து, வேத மந்திரங்கள் மற்றும் உபநிஷத்துக்களை முழங்க, சுவாமிக்கும் தாயார்களுக்கும் நறுமணப் பொருட்கள், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றைக் கொண்டு மகா திருமஞ்சனமும், சிறப்பு அபிஷேகங்களும் கண் கொள்ளாக் காட்சியாக நடத்தப்பட்டன. புதிய தங்கக் கவசம் இந்த ஜ்யேஷ்டாபிஷேகத்தின் மிக முக்கிய நோக்கம்,…
புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்குட்பட்ட திப்பராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி நாகவல்லி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. அன்று கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு வேத சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், 18-ம் தேதி வியாழக்கிழமை காலை பூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் யாத்ராதானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, காலை 10 மணி முதல் 11.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பால முருகர் மற்றும் ஸ்ரீதேவி நாகவல்லி மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு வேத மந்திரங்கள்…
