Author: Editor web3

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரி அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலின் 4-ஆம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவத் தேர்த்திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தச் சிறப்புமிக்க பிரம்மோற்சவ விழாவானது, திருக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் நடத்தப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு, மூலவர் பாலமுருகன் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், திருநீறு உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர், விதவிதமான மலர் மாலைகள் மற்றும் தங்க ஆபரணங்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, திருத்தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டார். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் மற்றும் வெளிநாடு வாழ் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் நேரில் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா” பக்தி கோஷங்களை எழுப்பியும், மேளதாளங்கள் முழங்கியும் தேரினை இழுத்துச் சென்று தரிசனம் செய்தனர்.

Read More

புதுச்சேரி காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீகயிலாசநாதர் சுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆற்றங்கரை ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா கடந்த 26-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் முதற்கால யாகசாலை பூஜைகளுடன் விமரிசையாகத் தொடங்கியது. இன்று அதிகாலை ஆறாம்கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, மகாபூர்ணாகுதியும் மகாதீபாராதனையும் காட்டப்பட்டன. தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க மங்களகரமாக ஏந்தி வந்து, ஆலயப் பிரகாரத்தை வலம் வந்தனர். பின்னர், ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய ராஜகோபுரம், மூலவர் மற்றும் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதிகளில் சிறப்பு மகாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது கும்பாபிஷேக புனிதநீர் குழாய்கள் மூலம் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…

Read More

புராணங்களின்படி, பிரளய காலத்தின் போது உலகைக் காக்க உமையன்னை சிவபெருமானை வழிபட்ட இரவே மகா சிவராத்திரி. எனவே இன்று ஒரு நாள் விரதம் இருப்பது ஓராண்டு முழுவதும் சிவனை வழிபட்ட பலனைத் தரும். அந்தவகையில், இன்று நாடு முழுவதும் மகா சிவராத்திரி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன,  மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானுக்கு நீர் அர்ப்பணிப்பது அனைத்து துன்பங்களையும் நீக்கி உலக மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்து மதத்தில் விரதங்கள் கடினமானதாகக் கருதப்படுகிறது. இந்த நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற, பக்தர்கள் தங்கள் தெய்வத்தை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பிரார்த்தனை செய்து, எந்த தடையும் இல்லாமல் தங்கள் நிறைவேற்றத்தைப் பெற வேண்டும். எனவே, மகாசிவராத்திரி விரதத்தை யார் கடைப்பிடிக்க வேண்டும், யார் கடைப்பிடிக்கக்கூடாது என்பதற்கான விதிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். மகாசிவராத்திரி விரதத்தை யார் கடைப்பிடிக்கக்கூடாது? சிவனை வழிபடும்போது என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் இந்த விதிகள் விளக்குகின்றன. மகாசிவராத்திரி விரதம் உணவு மற்றும் பழங்கள் இல்லாமல்…

Read More