Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

ஆடித்தபசு விழா கோலாகலம்: கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணர் காட்சி

திருப்பத்தூர் : முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொண்டாட்டம்..! புதிய கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆன்மீகம்»துன்பங்கள் நீங்க… செல்வம் பெருக… சனிக்கிழமை இதை பண்ணுங்க!. 
ஆன்மீகம்

துன்பங்கள் நீங்க… செல்வம் பெருக… சனிக்கிழமை இதை பண்ணுங்க!. 

Editor web3By Editor web3June 6, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
saturday perumal
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

நமது வாழ்வில் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் வளம் கொழிக்க வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். அந்த முயற்சிகளோடு சேர்த்து, சனிக்கிழமைகளில் மகாவிஷ்ணுவை மனமுருகி வழிபட்டால், வாழ்வில் செல்வச் செழிப்பு நிச்சயம் மேலோங்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை.

பொதுவாக, நவகிரகங்களில் சனிக்கிழமை என்பது சனி பகவானுக்குரிய நாளாகக் கருதப்பட்டாலும், அது ஆபத்பாந்தவனான பெருமாள் வழிபாட்டிற்கும் உகந்த நாளாகும். புரட்டாசி சனிக்கிழமைகள் மட்டுமல்லாமல், வருடத்தின் அனைத்து சனிக்கிழமைகளுமே வேங்கடவனை வழிபட்டு வேண்டிய வரங்களைப் பெறச் சிறந்த நாட்களாகும்.

சூரியனின் புத்திரனான சனீஸ்வரனை, மங்களம் இல்லாதவர் என்று உலகம் ஒதுக்கியபோது, அவரது மனவருத்தத்தை நாரதர் போக்கினார். கண்ணனுக்கு வரவிருக்கும் ஆபத்தைத் தடுத்து, புகழ்பெறுமாறு சனியிடம் நாரதர் கூறினார்.

இரண்யனின் சகோதரியான ஹோலிகா, நரசிம்மர் மீது கொண்ட பகையினால் கண்ணனை அழிக்கத் துடித்தாள். தீயினால் அழியாத விசேஷ வரத்தைப் பெற்றிருந்த அவள், ஹோலிப் பண்டிகையன்று தீக்குள் மறைந்திருந்து கண்ணனை எரிக்கத் திட்டமிட்டாள்.

இதனை உணர்ந்த சனி பகவான், தனது கூர்மையான பார்வையை ஹோலிகாவின் மீது செலுத்தினார். சனியின் பார்வை பட்ட மாத்திரத்தில் ஹோலிகாவின் மாயச் சக்தி அழிந்தது. கண்ணன் மூட்டிய நெருப்பில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள்.

தன்னைக்காத்த சனீஸ்வரனை வாழ்த்திய கண்ணன், “இனி நீ அமங்கலமானவன் அல்ல. உன் நாளான சனிக்கிழமை மிகவும் புனிதமானது. கலியுகத்தில் நான் வேங்கடவனாக திருமலையில் உறையும் போது, சனிக்கிழமைகளில் என்னை நாடி வரும் பக்தர்களுக்குக் கேட்ட வரங்களை அள்ளித் தருவேன்” என்று அருளினார். 

விரத முறையும் பலன்களும்: சனியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெருமாளுக்கு உண்டு. அதனால் தான் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுபவர்களுக்குச் சனி தோஷங்களின் தாக்கம் நீங்குகிறது. சனிக்கிழமை காலையில் நீராடி, தூய உள்ளத்தோடு பூஜைகள் செய்ய வேண்டும். மாலை வரை உணவின்றி, பால் அல்லது தண்ணீர் மட்டும் அருந்தி விரதமிருப்பது நல்லது. பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி, திருமாலை வழிபடுவது சங்கடங்களைத் தீர்த்து, கர்ம வினைகளைக் குறைக்கும்.

கிடைக்கும் நன்மைகள்: ஏழரைச் சனி மற்றும் சனி தோஷங்களின் வீரியம் குறையும். நீண்ட ஆயுள், நல் ஆரோக்கியம் மற்றும் வற்றாத செல்வம் பெருகும். தொடங்கும் காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

நம்முடைய கர்ம வினைகளையும், சனியின் உக்கிர பார்வையையும் தணித்துக் காக்கவே பூலோக வைகுண்டவாசனான வேங்கடேச பெருமாள் எழுந்தருளியுள்ளார். எனவே, ஒவ்வொரு சனிக்கிழமையிலும் விரதமிருந்து, அவனது அருள் மழையில் நனைந்து வாழ்வில் சகல யோகங்களையும் பெறுவோம்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleபுதுச்சேரி : வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை..! சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி..!
Next Article தஞ்சாவூர்: 27 பெருமாள் கருடசேவை கோலாகலம்..!! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!!
Editor web3
  • Website

Related Posts

ஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

July 28, 2026

ஆடித்தபசு விழா கோலாகலம்: கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணர் காட்சி

July 28, 2026

திருப்பத்தூர் : முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொண்டாட்டம்..! புதிய கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை..!

July 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

ஆடித்தபசு விழா கோலாகலம்: கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணர் காட்சி

திருப்பத்தூர் : முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொண்டாட்டம்..! புதிய கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை..!

திருவண்ணாமலையில் ஆடி பவுர்ணமி கிரிவலம்: உகந்த நேரம் என்ன?!

சிறுவாபுரியில்  இருந்து தொடங்கியது 108 வேல் யாத்திரை…  போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு ஆன்மீக நடவடிக்கை

Trending Posts

ஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

July 28, 2026

ஆடித்தபசு விழா கோலாகலம்: கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணர் காட்சி

July 28, 2026

திருப்பத்தூர் : முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொண்டாட்டம்..! புதிய கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை..!

July 28, 2026

திருவண்ணாமலையில் ஆடி பவுர்ணமி கிரிவலம்: உகந்த நேரம் என்ன?!

July 27, 2026

சிறுவாபுரியில்  இருந்து தொடங்கியது 108 வேல் யாத்திரை…  போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு ஆன்மீக நடவடிக்கை

July 27, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.