திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தேவங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமகா காளியம்மன் கோயில். மிகவும் பழமை வாய்ந்த கோயிலான இங்கு ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் தினசரி சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவு பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலாவும் நடைபெறும்.

அந்த வகையில் இந்தாண்டின் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை ஸ்ரீமகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக பக்தர்கள் பால் காவடி, செடல் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் நெற்றிரவு நடைபெற்றது. இதில் தேவங்குடி மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று, தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version