Author: Editor TN Talks
மேஷம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர். மதிப்பு உயரும். ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவை பெறுவீர். கடையை வேறு இடத்துக்கு மாற்ற முயல்வீர். மிதுனம்: சவாலான காரியங்களை சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர். வியாபாரத்தில் போட்டி குறையும். லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். கடகம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். பூர்வீக சொத்து வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.…
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் மாஃபா பாண்டியராஜன் மும்பைக்கு சென்றதால், அவர் தவெகவில் இணையக்கூடும் என தகவல் பரவி வருகிறது. சென்னை வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளதால், பெரும் பரப்பரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு, அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், கொள்கை பரப்பு மாநில இணைச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வராதது பெரும் பேசுபொருளாகி உள்ளது. கூட்டத்தில் பங்கேற்காத மாஃபா முன்னதாக, அ.தி.மு.க-வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல அணிகளாக பிரிந்துள்ளதால், கட்சியை ஒன்றினைக்க வேண்டும் என கூறிய செங்கோட்டையன், சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்த பிறகு, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, செங்கோட்டையன் தனது சட்டபேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, நடிகர்…
அதிமுக-வில் இணைவதற்காக அமித் ஷா வழியாக கடைசி முயற்சியில் இறங்கியுள்ளார் ஓபிஎஸ். இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பை மீண்டும் கட்சிக்குள் இணைக்கலாமா என்பது குறித்து தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் பழனிசாமி தனித்தனியே கருத்துக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், திமுக கூட்டணியை வீழ்த்த பலமான கூட்டணியை உருவாக்குவதற்காக பகீரதப்பிரயத்தனம் செய்து வருகிறது பாஜக. அதன் ஒரு பகுதியாக, அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர பாஜக மட்டுமல்லாது பலரும் முயற்சி எடுத்தனர்; இன்னும் எடுத்து வருகின்றனர். இருந்த போதும் இவர்களை கட்சிக் குள்ளும் கூட்டணிக்குள்ளும் சேர்க்க முடியாது என்பதில் பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார். இந்நிலையில், செங்கோட்டையன் தவெக-வில் இணைந்த பிறகு பழனிசாமியின் முடிவில் மாற்றம் தெரிய ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது. அமித் ஷாவை சந்தித்ததற்குப் பின்னால் ஓபிஎஸ்ஸும்,…
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக 3,250 முறை பாத யாத்திரை சென்று அசத்தியுள்ளார் 71 வயது முதியவர் ஒருவர். திருப்பதியை சேர்ந்தவர் வெங்கடரமண மூர்த்தி (71). இவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணியாற்றி 2014-ல் ஓய்வு பெற்றவர். ஏழுமலையானின் தீவிர பக்தரான இவர், பணியில் இருக்கும்போதே வாரம் ஒருமுறை விடுமுறை நாளில் திருமலைக்கு வாரி மெட்டு மார்கமாக நடந்து சென்று சுவாமியை தரிசிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். பின்னர் இதனையே அவர் ஒவ்வொரு வாரமும் கடைபிடிக்க தொடங்கினார். இதுவரை தனது வாழ்நாளில் திருப்பதி ஏழுமலையானை 3,460 முறை தரிசித்துள்ளார். இதில், 3,250 முறை மலையேறி நடந்தே சென்று சுவாமியை தரிசித்துள்ளார். இதுகுறித்து வெங்கடரமண மூர்த்தி கூறும்போது: நான் பல ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வருகிறேன். வாரி மெட்டு மார்கமாக 2388 படிகள் ஏறிச் செல்வதையே நான் வழக்கமாக கொண்டுள்ளேன். இதற்கு அவர் மீதுள்ள அளவு கடந்த பக்தியே காரணம். வேலையில்…
நல்லதே நடக்கும் | 11.12.2025 | விசுவாவசு 25 கார்த்திகை | வியாழக்கிழமை திதி: சப்தமி மதியம் 1.58 வரை. பிறகு அஷ்டமி. நட்சத்திரம்: பூரம் நாளை அதிகாலை 3.53 வரை. பிறகு உத்திரம். நாமயோகம்: விஷ்கம்பம் காலை 11.35 வரை. பிறகு பிரீதி. நாமகரணம்: பவம் மதியம் 1.58 வரை. பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9. யோகம்: சித்தயோகம் நாளை அதிகாலை 3.53 வரை. பிறகு மந்தயோகம். சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை. சந்திராஷ்டமம்: அவிட்டம் சூரிய உதயம்: சென்னையில் காலை 6.20. அஸ்தமனம்: மாலை 5.43. ராகு காலம்: மதியம் 1.30-3.00 எமகண்டம்: காலை 6.00-7.30 குளிகை: காலை 9.00-10.30 நாள்: தேய்பிறை அதிர்ஷ்ட எண்: 1, 4 பரிகாரம்: தைலம்
மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் குரு(வ) – பஞ்சம ஸ்தானத்தில் கேது – சப்தம ஸ்தானத்தில் புதன் – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் – லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன. பலன்கள்: இந்த வாரம் நினைத்த காரியங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பண வரத்து தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள்…
மேஷம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு மனநிறைவை தரும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் தேடி வருவர். கையில் பணம் புரளும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். அலுவலகக் குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்து நடக்கவும். மிதுனம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது வேலை அமையும். பிள்ளைகளால் பெருமையடைவீர். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். கடகம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். பிள்ளைகளிடம் முன் கோபத்தை காட்ட வேண்டாம். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்.…
“எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு சார்பில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திமுக சார்பில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” திட்டம் அன்மையில் தொடங்கப்பட்டது. சென்னை மயிலாப்பூர் தொகுதி வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஒரு வாக்க்ச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உறுப்பினர்களுக்கும், அவரவர்களுக்கான இலக்கையும் ஸ்டாலின் நிர்ணயித்து கொடுத்தார். இதையடுத்து திமுக வாக்குச்சாவடி உறுப்பினர்கள் ஒரு மாதம் வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். அதேபோல் இந்தக் குழுக்களில் மகளிர் ஒருவராவது கட்டாயம் இருக்க வேண்டும் என்று திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது…
10 தோல்வி கண்ட பழனிசாமி, 2026 தேர்தலிலும் தோல்வியடைவார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விமர்சித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட போலி விவசாயி எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை. 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அண்ணா திமுக அமித்ஷா திமுகவாக மாறி விட்டதை மறைக்க முயற்சித்தாலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பாஜகவின் அடிமை பழனிசாமி என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லும் வகையிலேயே உள்ளன. “கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை; கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்” என்ற தீர்மானம் பார்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் மத்தியில் டான்? போல காட்டுமே…
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிற தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே ரூ.1000 மகளிர் உரிமை தொகையை வழங்குகின்றனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தீய சக்தியான திமுகவை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அதிமுகவின் தாரக மந்திரம். நாட்டு மக்களைத்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்களது வாரிசாகப் பார்த்தனர். சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தருணத்தில் முதல்வர் நடந்துகொண்ட விதம் அனைவருக்கும் தெரியும். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தில் என்னுடைய மேஜை மீது திமுகவினர் ஏறி நடனமாடினார்கள். அமைச்சர்களின் மேசை மீதும் நடனம் ஆடினார்கள். இப்படிப்பட்ட கொடுமையான நிகழ்வுகளை எல்லாம் ஏற்படுத்தியவர்…
