Author: Editor TN Talks

ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தரிசன டோக்​கன்​கள் இல்​லா​விட்​டாலும் பக்​தர்​கள் சுவாமியை தரிசனம் செய்​ய​லாம் என அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு தெரி​வித்​துள்​ளார். திரு​மலை​யில் உள்ள பக்​தர்​களின் தங்​கும் விடு​தி​யை(பிஏசி-2) தேவஸ்​தான அறங்​காவலர் பிஆர் நாயுடு ஆய்வு செய்​தார். மேலும் அவர் முடி காணிக்கை செலுத்​து​மிடம், லாக்​கர்​கள் வழங்​குமிடம், அன்​னபிர​சாத மையம் போன்​றவற்​றை​யும் ஆய்வு செய்​து, நிறை, குறை​களை பக்​தர்​களிடம் கேட்​டறிந்​தார். அப்​போது அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு வரும் 30-ம் தேதி முதல், ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை திரு​மலை​யில் பக்​தர்​களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக மேற்​கண்ட 10 நாட்​களுக்கு பாது​காப்​பு, அன்​ன​தானம், தரிசனம் போன்​றவற்​றுக்​கும் முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் வகை​யில் ஏற்​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. முதல் 3 நாட்​கள், அதாவது 30, 31 மற்​றும் ஜனவரி 1ம் தேதி வரை குலுக்​கல் முறை​யில் பக்​தர்​கள் தரிசன…

Read More

16.12.2025 | விசுவாவசு 01 மார்கழி| திங்கள்கிழமை திதி: துவாதசி இரவு 11.58 வரை, பிறகு திரயோதசி. நட்சத்திரம்: சுவாதி மதியம் 2.07 வரை, பிறகு விசாகம். நாமயோகம்: அதிகண்டம் மதியம் 1.18 வரை, பிறகு சுகர்மம். நாமகரணம்: கௌலவம் காலை 10.39 வரை, பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00. யோகம்: சித்தயோகம் மதியம் 2.07 வரை, பிறகு மந்தயோகம். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: ரேவதி மதியம் 2.07 வரை, பிறகு அசுவனி. சூரிய உதயம்: சென்னையில் காலை 6.23. அஸ்தமனம்: மாலை 5.45. ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30 எமகண்டம்: காலை 9.00-10.30 குளிகை: மதியம் 12.00-1.30 நாள்: தேய்பிறை அதிர்ஷ்ட எண்: 5, 9 பரிகாரம்: பால்

Read More

மேஷம்: மனநிறைவு, நம்பிக்கை, உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுங்கள். எக்காரியத்திலும் கவனம் தேவை. பிள்ளைகளால் திடீர் பயணம், அலைச்சல் இருக்கும். வாகனம் செலவு வைக்கும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். ரிஷபம்: விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். உடல்நலம் சீராகும். டென்ஷன் குறையும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள். பண வரவு உண்டு. மிதுனம்: தடைபட்டுவந்த காரியங்கள் சுமுகமாக முடியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். தொழில், வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கடகம்: வீண், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். உடல்நலம் சீராகும். பொருட்கள் சேரும். சிம்மம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லைகள்…

Read More

வீட்டில் யாரெல்லாம் விளக்கேற்றால் என்பது பற்றிய சந்தேகமும் பலருக்கும் உள்ளது. அசைவம் சாப்பிட்ட பிறகு என்ன செய்து விட்டு விளக்கேற்றலாம்? விளக்கேற்றுவது பற்றி இருக்கும் பல விதமான சந்தேகங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம். அசைவம் சாப்பிடுவதை காரணமாக காட்டி விளக்கேற்றாமல் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் தெளிவை தரும். தெய்வ வழிபாட்டில் மிக முக்கியமானது விளக்கேற்றுவது. இறைவனை ஜோதி வடிவமாக வழிபடும் பழக்கம் உள்ளதாலும், மகாலட்சுமியின் அம்சம் என்பதாலும் விளக்கேற்றுவது மிகவும் அவசியமாகும். வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் கெட்ட சக்திகள் எதுவும் வீட்டில் தங்காது. அதோடு தெய்வீக சக்திகள், நேர்மறை ஆற்றல்கள் வீட்டில் நிறைந்திருக்கும். வீட்டில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கண்டிப்பாக விளக்கேற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படி ஏற்றப்படும் விளக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். சிலரது வீடுகளில் அசைவம் சமைத்தாலோ அல்லது அசைவம் சாப்பிட்டாலோ விளக்கேற்றமாட்டார்கள். அதே…

Read More

வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட இளைஞர்​களுக்கு அதிக வாய்ப்​பு​கள் வழங்க வேண்​டும் என்று முதல்​வரிடம் கோரிக்கை வைப்​பேன் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கூறி​னார். திரு​வண்​ணா​மலை​யில் நடை​பெற்ற திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்​வாகி​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் இளைஞரணிச் செய​லா​ள​ரும், துணை முதல்​வரு​மான உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: சேலத்​தில் நடந்த இளைஞரணி மாநாட்​டில் பேசிய முதல்​வர் ஸ்டா​லின், ‘உதயநிதி மட்​டும் எனது வாரிசு கிடை​யாது. இங்கு கூடி​யுள்ள அனை​வரும் எனது கொள்கை வாரிசுகள்’ என்​றார். அத்​தகைய கொள்கை வாரிசுகள் இங்கு கூடி​யுள்​ளோம். திமுக​வில் மட்​டும்​தான் இளைஞரணி நிர்​வாகி​கள் கூட்​டம் மாநாடு​போல நடத்​தப்​படும். 75 ஆண்​டு​களைக் கடந்​துள்ள திமுக​வுக்கு இளைஞரணி மிகப் பெரிய பலமாகும். குஜ​ராத்​தில் அமித்ஷா பேசும்​ போது ‘பிஹாரில் வெற்றி பெற்​றுள்​ளோம். அடுத்து தமிழ்​நாடு​தான்’ என்று பேசி​யுள்​ளார். எவ்​வளவு மிரட்​டி​னாலும், அதை எதிர்​கொள்ள திமுக இளைஞரணி தயா​ராக உள்​ளது. சிபிஐ, அமலாக்​கத் துறை, தேர்​தல் ஆணை​யம் என அரசு…

Read More

கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைத்த வெற்றி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைக்கவுள்ள வெற்றிக்கு முன்னோட்டம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. 4 மாநகராட்சிகள், 54 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 77 ஊராட்சி ஒன்றியங்கள், 498 கிராம பஞ்சாயத்துக்களிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. கேரளாவில் 3 மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது. இதில் ஆளும் கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைப் போல, 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது. தமிழகத்தில்…

Read More

பாஜகவை விஜய் விமர்சிக்காதது ஏன்?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் பெ. சண்முகம் கட்சி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என பெயர் மாற்றம் செய்ய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது காந்தி என்ற பெயரை மாற்றுவதற்காக இப்பெயரை கொண்டு வந்துள்ளனர். மேலும், உத்தரவாதம் என்பதை நீக்கியுள்ளனர். இதன் மூலம் பயனாளிகள் உரிமையை இழக்கின்றனர். இனி வேலை தருவது அரசின் விருப்பம், அதை உரிமையாக கோர முடியாது. 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் இடங்கள் கேட்போம். 2026-ம் ஆண்டு தேர்தலில் பாஜக, அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வரக்கூடாது. தேர்தலில் அவர்களை வீழ்த்தும் வலிமை படைத்த அணியாக திமுக உள்ளது. தவெக தலைவர் விஜய், பாஜகவை கொள்கை எதிரி என கூறினார். ஆனால், அவர்…

Read More

| 15.12.2025 | விசுவாவசு 29 கார்த்திகை | திங்கள்கிழமை திதி: ஏகாதசி இரவு 9.21 மணி வரை, பிறகு துவாதசி. நட்சத்திரம்: சித்திரை காலை 11.06 வரை, பிறகு சுவாதி. நாமயோகம்: சோபனம் நண்பகல் 12.25 வரை, பிறகு அதிகண்டம். நாமகரணம்: பவம் காலை 8.04 வரை, பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 6-7, 9-10.30, மதியம் 1-2, மாலை 3-4, 6-7. யோகம்: பிரபலாரிஷ்டயோகம் காலை 11.06 வரை, பிறகு அமிர்தயோகம். சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி. சூரிய உதயம்: சென்னையில் காலை 6.23. அஸ்தமனம்: மாலை 5.44. ராகு காலம்: காலை 7.30-9.00 எமகண்டம்: காலை 10.30-12.00 குளிகை: மதியம் 1.30-3.00 நாள்: தேய்பிறை அதிர்ஷ்ட எண்: 3, 9 பரிகாரம்: தயிர்

Read More

மேஷம்: சந்தர்ப்பங்களையும் சரியாகப் பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்தி வெளியூரில் இருந்து வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ரிஷபம்: நம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வீண், ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பொருட்கள் சேரும். உங்கள் சேமிப்பு மேலும் அதிகரிக்கும். மிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பண வரவு, பொருள் வரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். தக்க சமயத்தில் உதவுவார்கள். பணம், நகை, முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். கடகம்: தைரியமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். சிம்மம்: பழைய சம்பவங்களை நினைத்துப்பார்த்து…

Read More

என் கேரக்டரயை புரிஞ்சிக்க மாட்றீங்களே என்று கூட்ட மேடையில் பஞ்ச் டயலாக்கை முதல்வர் ஸ்டாலின் பேசியது, திமுகவினரை ஆச்சரியமடைய செய்தது. திருவண்ணாமலை அருகே உள்ள மலப்பாம்பாடி கிராமத்தில் இன்று மாலை திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய 91 சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதில் பங்கேற்பதற்காக, திருவண்ணாமலை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான மேல் செங்கத்தில் இருந்து வழிநெடுகிலும் கரகம், தப்பாட்டம், செண்டை மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்கள் மற்றும் திமுக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலிக்கு வெள்ளி சிம்மாசனம் பரிசாக வழங்கப்பட்டது. இதையடுத்து பேசிய முதலைமைச்சர் ஸ்டாலின்,…

Read More