Author: Editor TN Talks

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச அம்மா லேப்டாப் வழங்கப்பட்டது. அத்திட்டத்தால் பயனடைந்த மாணவர்கள் மற்றும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் லேப்டாப் கிடைக்காத மாணவர்கள், அம்மா லேப்டாப்பை உறவினர்களிடம் இருந்து பெற்று பயனடைந்த மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். எந்த வகையில் இலவச லேட்டாப் பயனுள்ளதாக இருந்தது, திமுக ஆட்சி வந்த பிறகு, லேப்டாப் கிடைக்காததால், எத்தகைய தடைகள் ஏற்பட்டன என்பது குறித்து மாணவர்களிடம் பழனிசாமி கேட்டறிந்தார். மேலும் காணொலி வாயிலாகவும் பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுடனும் கலந்துரையாடினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மாணவர்கள், பெற்றோர்கள், நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை பிரதிபலித்த அரசாங்கமாக அதிமுக அரசு இருந்தது. 2021-ல்…

Read More

“இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற பெயர் எதற்கு?” என்று நூறு நாள் வேலைத்திட்ட விவகாரத்தில் மவுனமாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் விக்சித் பாரத் கேரண்டி பார் ரோஜ்கார் அண்டு அஜீவிகா மிஷன் (VBGRAMG) குறித்து எதிர்க்கட்சியான அதிமுக-வின் நிலைப்பாடு என்ன? மூன்று வேளாண் சட்டங்கள், சிஏஏ போல இதிலும் அமித் ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா பழனிசாமி? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டுள்ளனர். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை…

Read More

 18.12.2025 | விசுவாவசு 03 மார்கழி | வியாழக்கிழமை திதி: சதுர்த்தசி நாளை அதிகாலை 5 மணி வரை, பிறகு அமாவாசை. நட்சத்திரம்: அனுஷம் இரவு 8.04 வரை, பிறகு கேட்டை. நாமயோகம்: திருதி நாமயோகம் பிற்பகல் 3.01 வரை, பிறகு சூலம். நாமகரணம்: விஷ்டி நாமகரணம் பிற்பகல் 3.48 வரை, பிறகு சகுனி. நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9. யோகம்: சித்தயோகம் இரவு 8.04 வரை சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை. சந்திராஷ்டமம்: பரணி, கிருத்திகை. சூரிய உதயம்: சென்னையில் காலை 6.24 அஸ்தமனம்: மாலை 5.46 ராகு காலம்: மதியம் 1.30-3.00 எமகண்டம்: காலை 6.00-7.30. குளிகை: காலை 9.00-10.30. நாள்: தேய்பிறை அதிர்ஷ்ட எண்: 5, 7 பரிகாரம்: வெல்லம்

Read More

12 ராசிக்காரர்களுக்கும் இன்று ராசிபலன் எப்படி உள்ளது என பார்க்கலாம். மேஷம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் அநாவசியமாகக் கோபத்தைக் காட்ட வேண்டாம். அக்கம்பக்கத்தினரால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது. ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வேலைப்பளு குறையும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். பழைய மின்சாதனங்களை மாற்றி புதியது வாங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும். கடகம்: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். சிம்மம்: எதையும் புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள்.…

Read More

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கருத்து சொல்லாத தமிழக வெற்றிக்கழகத்தின் நிலைப்பாட்டை மையப்படுத்தி அண்ணாமலை மற்றும் அருண்ராஜ் இடையே வார்த்தைப்போர் வெடித்துள்ளது. தமிழக அரசியலில் பெரும் புயலை கிளம்பியுள்ள திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் ஒவ்வொரு கட்சியும், அதன் தலைவர்களும் ஒரு கருத்தை அறிவித்து வரும் நிலையில், தற்போதைய சூழலில் ‘நாங்கள் தான் மாற்று அரசியல் தரப்போகிறவர்கள்’ என வந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், இதுவரை வாய் திறக்காதது குறித்து பேசியிருந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “அரசியலில் எது எப்படி இருந்தாலும் பேசவேண்டிய இடத்தில் பேசினால் விஜய் நல்ல அரசியல்வாதியாக வருவார். இவ்வளவு பிரச்சனைகள் நடக்கும்போது நான் வேடிக்கை மட்டும் தான் பார்ப்பேன் என்றால், உங்களை(விஜய்யை) நம்பி எப்படி மக்கள் ஆட்சிப் பொறுப்பை கொடுப்பார்கள்? தவறு என்றால் தவறு எனக்கூறவேண்டும். சரி என்றால் சரி எனக்கூறவேண்டும். பேசவே மாட்டேன் என்றால் அது என்ன அரசியல்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் தெரிவிக்கும்…

Read More

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நாளை (டிச.18) ஈரோட்டில் மக்கள் சந்திப்பை மேற்கொள்ளவுள்ள நிலையில், அந்நிகழ்வை சுற்றி நடந்துள்ள தகவல்கள் பனையூர் வட்டாரத்திலிருந்து லேசாக காற்றில் பரவி வருகின்றன. அவற்றை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். ஈரோடு மாவட்டம், சரளை பகுதியிலுள்ள விஜயபுரி அம்மன் கோவில் திடலில் வியாழக்கிழமையான நாளை (நவ.18) மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்று பேச இருக்கிறார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய். கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் பொது வெளியில் முதல்முறையாக மக்களை சந்திக்க இருக்கிறார் விஜய். இதையொட்டி பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள், தொண்டர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்து ஏற்பாடுகளும் எவ்வித குறையுமின்றி இருக்க வேண்டும் என்பதற்காக களத்தில் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார் ஈரோடு மண்ணின் மைந்தரான செங்கோட்டையன். அவரது இந்த மெனக்கெடல்களுக்கு பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அதாவது, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீதிருந்த…

Read More

தி.மு.க.,வைச் சேர்ந்த, அமைச்சர் நேரு கட்டுப்பாட்டில் உள்ள, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், கடந்த 2024- – 25ம் ஆண்டுகளில் உதவி, இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட, 2,538 பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஒரு பதவிக்கு, 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை என, மொத்தம் 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்பதால், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரி, தமிழக டி.ஜி.பி.,க்கு, கடந்த அக்டோபரில் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில், இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் உரிய அனுமதிகளை பெற்று, வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட கோரி, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தமிழக அரசு, டி.ஜி.பி., மற்றும் அமலாக்கத்…

Read More

17.12.2025 | விசுவாவசு 02 மார்கழி | புதன்கிழமை திதி: திரயோதசி பின்னிரவு 2.33 வரை. பிறகு சதுர்த்தசி. நட்சத்திரம்: விசாகம் மாலை 5.09 வரை. பிறகு அனுஷம். நாமயோகம்: சுகர்மம் மதியம் 2.12 வரை. பிறகு திருதி. நாமகரணம்: கரசை மதியம் 1.16 வரை. பிறகு வணிசை. நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8. யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை. சந்திராஷ்டமம்: அசுவனி மாலை 5.09 வரை. பிறகு பரணி. சூரிய உதயம்: சென்னையில் காலை 6.24. அஸ்தமனம்: மாலை 5.45. ராகு காலம்: மதியம் 12.00-1.30 எமகண்டம்: காலை 7.30-9.00 குளிகை: காலை 10.30-12.00 நாள்: தேய்பிறை அதிர்ஷ்ட எண்: 1, 4 பரிகாரம்: பால்

Read More

மேஷம்: பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் தொடர்பான வழக்கில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கவனம் அவசியம். அலுவலகத்தில் அமைதி காக்கவும். ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் அசதி விலகும். பணவரவு உண்டு. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். மிதுனம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் சாதனை களால் பெருமையடைவீர். சோர்வு நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும். கடகம்: சிக்கலான, சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க போராடுவீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர். சிம்மம்: வெளிவட்டாரத்தில் எதிலும் வெற்றி பெறுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும்.…

Read More

மும்பையில் உள்ள பாந்த்ரா பகு​தி​யில் ரூ.14.4 கோடி செல​வில் ஏழு​மலை​யான் கோயில் கட்ட, திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில், திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. தேவஸ்​தான தலை​வர் பிஆர் நாயுடு தலை​மை​யில் நடை​பெற்ற இதில் பல்​வேறு தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. இதுகுறித்து அறங்​காவலர் பிஆர் நாயுடு மற்​றும் நிர்​வாக அதி​காரி அனில் குமார் சிங்​கால் ஆகியோர் கூட்​டாக செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தேவஸ்​தானத்​தின் கோயில்​களுக்​காக சித்​தூர் மாவட்​டம், பலமனேர் அருகே 100 ஏக்​கர் பரப்​பள​வில் கொடிமரங்​கள் மற்​றும் தேர்​களுக்​காக தோப்பு அமைக்​கப்​படும். திருப்​பதி ஸ்ரீபத்​மாவதி சிறு​வர் இதய சிகிச்சை மருத்​து​வ​மனையை நவீனப்​படுத்த கூடு​தலாக ரூ.48 கோடி நிதி ஒதுக்​கப்​படும். மும்பை பாந்த்ரா பகு​தி​யில் ரூ.14.4 கோடி செல​வில் ஏழு​மலை​யான் கோயில் கட்​டப்​படும். இதற்​கான பணி​கள் விரை​வில் தொடங்​கும். பக்​தர்​களின் வசதிக்​காக 20 ஏக்​கரில் திருப்​ப​தி​யில் ஒருங்​கிணைந்த நகரம் உரு​வாக்​கப்​படும்.…

Read More