Author: Editor TN Talks

கூட்டணி குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம், நீதித்துறை சுதந்திரம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். இந்த நிலையில் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடந்தது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் இப்போது குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு: பொது எதிரியை வீழ்த்த, ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு, தமிழ்நாட்டில் அதிமுக அமைத்திருக்கும் கூட்டணிக்கு இப்பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழையின் போது, தொடர்மழை, கனமழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்ற போதும், இயற்கைப் பேரிடரை பாதுகாப்பாக எதிர்கொள்ளவும்,…

Read More

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக எம்பி அருண் நேரு சந்தித்து பேசியது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார் . இந்நிலையில், அமலாக்கத்துறை கடிதத்துக்கு பயந்து பாஜக நிர்வாகிகளை சந்தித்தத்தாக தமிழக வெற்றிக் கழகத்தினர் சமூக வலைதளங்களில் விமர்சித்த நிலையில், சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார் எம்பி அருண் நேரு. அதில், கடன் வாங்கும் பொது மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் சேகரிக்க வேண்டும் எனவும் நிதி மோசடிகளில் ஈடுபட்ட குடும்பங்களுக்கு பண தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே நிதியமைச்சர் சந்தித்ததாக விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், திமுக எம்பியும், கேஎன் நேருவின் மகனுமான அருண் நேரு நேற்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அவரிடம் மனு அளித்தார். இது தொடர்பான பதிவை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியீட்ட நிலையில் சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக்…

Read More

ராகுல் காந்தியின் ஆலோசகரான பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்ததாக வெளியாகி உள்ள தகவல் திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டெல்லிக்கு புகார் அனுப்பினர். இந்நிலையில், தான் விஜயை சந்தித்தது தனிப்பட்ட சந்திப்பு எனவும், இதனால் காங்கிரஸ் – திமுககூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் விஜயின் இல்லத்தில் இரவு நேரத்தில், ராகுல்காந்தியின் ஆலோசகரும், காங்கிரஸ் கட்சியின் தகவல் பகுப்பாய்வு குழு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி இடையே நடந்த சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு முதலில் ரகசியமாகவே இருந்தது. ஆனால் தகவல் வெளியானதும், அது காங்கிரஸுக்குள் சங்கடத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தக்கூடிய பேச்சுவார்த்தையை பிரவீன் சக்கரவர்த்தி தனிப்பட்ட முறையில் நடத்தினார் என்ற…

Read More

தவெகவில் புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார் விரைவில் இணையக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரியில் இன்று நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், அமைச்சர் ஜான்குமார் பெயரை குறிப்பிடாமல் சில கருத்துகளை தெரிவித்தார். அதாவது அமைச்சராக அவர் பொறுப்பேற்று பல மாதங்கள் ஆனபிறகும் இலாகா தரப்படவில்லை, இது சிறுபான்மையின மக்களுக்கு (கிறிஸ்தவர்கள்) எதிரானது என விமர்சித்தார். ஜான்குமார் பாஜகவில் இருக்கும் நிலையிலும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டினின் ஜேசிஎம் மன்றத்துடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதை சுட்டிக்காட்டி, அவருக்கு முதலமைச்சர் ரெங்கசாமி இலாகா தராமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து புதுச்சேரி கூட்டத்தில் விஜய் இன்று பேச வேண்டியது ஏன் பலரையும் யோசிக்க வைத்துள்ளது. விஜய் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர். ஜான்குமாரும் கிறிஸ்தவர் என்பதால், அவரை தன்பக்கம் வரவழைக்கும் முயற்சியாகவே விஜய் இவ்வாறு பேசியிருப்பதாகவும், விரைவில் அவர் தவெகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அரசியல் ஆர்வலர்கள்…

Read More

புதுச்சேரி சட்டப்பேரவைக்கும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் இணைந்து அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் விஜய்யின் தவெக ஈடுபடவில்லை. ஆனால் புதுச்சேரியில் தவெக கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதை அக்கட்சி தரப்பு மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை. இந்நிலையில், தவெக  தொடங்கியபிறகு புதுச்சேரியில் முதல்முறையாக இன்று நடைபெற்ற அக்கட்சி பொதுக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசினார். அப்போது, தவெக கூட்டத்திற்கு அனுமதி தரப்பட்டது, காவல்துறை பாதுகாப்பு வழங்கியது உள்ளிட்டவற்றுக்காக என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான புதுச்சேரி அரசை பாராட்டியதோடு, அக்கட்சித் தலைவரும் முதல்வருமான ரெங்கசாமிக்கும் தமது நன்றியை விஜய் தெரிவித்தார். இதேபோல் தவெக மூத்த தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோரும் கூட்டத்தில் பேசியபோது புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவித்தனர். அதேநேரத்தில் விஜய் பேசியபோது, திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்தார். இந்த பேச்சின் மூலம், புதுச்சேரி…

Read More

தமிழகத்திற்கு மட்டுமில்லை, புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன், துணை நிற்பேன் என தவெக  தலைவர் விஜய் உறுதிபடத் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், இதுகுறித்து தவெக தலைவர் விஜய் பேசியதாவது: ஒன்றிய அரசுக்குதான், புதுச்சேரி, தமிழகம் வேறு வேறு. ஆனால் நமக்கு அனைத்தும் ஒன்றுதான். தமிழர்கள் வாழும் பகுதி அனைத்தும் நமக்கு ஒன்றுதான். வேறு வேறு கிடையாது. தமிழகம், புதுச்சேரி வேறு வேறாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒன்றுதான். சொந்தங்கள்தான். உலகின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும், அவர்கள் நமது உயிர்தான். நமது உறவுதான். தமிழகத்திற்கு முன்பே, புதுச்சேரியில் 1974-ல் அதிமுக ஆட்சியமைந்தது. தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்ததே புதுச்சேரிதான். தமிழகத்தை போலவே புதுச்சேரி மக்கள், என்னை 30 ஆண்டுகளாக தாங்கி பிடித்துள்ளனர். இந்த விஜய், தமிழகத்திற்கு மட்டும் குரல் கொடுக்க மாட்டேன். புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன். அது எனது கடமையாகும். இந்த புதுச்சேரி அரசு குறித்து பேசியே ஆக வேண்டும்.…

Read More

தில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தவெக மூத்த தலைவர் ஆதவ் அர்ஜூனா சவால் விடுத்தார். புதுச்சேரி கூட்டத்தில் பேசியபோது அவர் கூறியதாவது: புதுச்சேரி கூட்டத்திற்கு காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு அளித்துள்ளனர். தமிழகத்தில் கூட இப்படி வழங்கப்பட்டதில்லை. தமிழக காவல்துறை குறித்து பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின் இதை கவனிக்க வேண்டும். ஆட்சி அதிகாரம், காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு தவெகவை அடக்கி விடலாம் என நினைக்க வேண்டாம். தில் இருந்தால் தேர்தலில் தவெகவுடன் முதல்வர் ஸ்டாலின் மோத வேண்டும். 2026-ல் தமிழக தேர்தலில் தவெக நிச்சயம் வெற்றி பெறும். முதலமைச்சராக தலைவர் விஜய் பதவியேற்பார். இதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பேசினார்.

Read More

புதுச்சேரியில் 2026-இல் தவெக ஆட்சியமையும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்தார். புதுச்சேரியில் இன்று தவெகவின் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது: 2026-ல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெறும். தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பார். அதுபோல புதுச்சேரியிலும் தவெக ஆட்சியமையும். தமிழகத்தில் தவெக கூட்டம் எதற்கும் அனுமதி தருவதில்லை. ஆனால் தவெக காற்று போல. காற்றை தடுக்க முடியுமா. அதுபோல்தான் தவெகவையும் தடுக்க முடியாது. என்ன செய்தாலும், தவெகவின் ஆட்சியமைவதை யாராலும் தடுக்க முடியாது. தவெக தலைவர் விஜய் மீது தமிழக மக்களும், புதுச்சேரி மக்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். கட்டுக்கோப்பாக கூட்டத்திற்கு தவெக தொண்டர்கள் வந்துள்ளனர். இதை காணு்ம்போது மகிழ்ச்சியாக உள்ளது. தேர்தலுக்கு 3 மாதமே உள்ளது. இந்த காலகட்டத்தில் தவெகவினர் சிறப்பாக கட்சி பணியாற்ற வேண்டும். அப்படி பணியாற்றினால் புதுச்சேரியில் தவெகவின் ஆட்சி அமைவது உறுதி.…

Read More

தவெக வளர்ந்து வரும் கட்சியாக உள்ளதால், அதன் தலைமையில் 2026 தேர்தலில் மெகா கூட்டணி அமைந்தால் மிருக பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்தி விடலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் யோசனை தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட அமமுக சார்பில் தெற்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கல்லூரி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நிர்வாகிகளிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், “தேர்தல் வாக்குறுதிகளாக திமுக அளித்த 90 சதவீத வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கிறது. போதை பழக்கத்தால் கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அப்படி இருந்தும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உறுத்தலாகவே உள்ளது.…

Read More

நல்லதே நடக்கும்  திதி: பஞ்சமி மதியம் 2.29 வரை. பிறகு சஷ்டி. நட்சத்திரம்: ஆயில்யம் பின்னிரவு 2.21வரை. பிறகு மகம். நாமயோகம்: பிராம்யம் மாலை 4.57 வரை.பிறகு வைதிருதி. நாமகரணம்: தைதுலம் மதியம் 2.29 வரை. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8. யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: உத்திராடம் சூரிய உதயம்: சென்னையில் காலை 6.19. அஸ்தமனம்: மாலை 5.42. ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30 எமகண்டம்: காலை 9.00-10.30 குளிகை: மதியம் 12.00-1.30 ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30 எமகண்டம்: காலை 9.00-10.30 குளிகை: மதியம் 12.00-1.30

Read More