Author: Editor TN Talks
மேஷம்: பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் தொடர்பான வழக்கில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கவனம் அவசியம். அலுவலகத்தில் அமைதி காக்கவும். ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் அசதி விலகும். பணவரவு உண்டு. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். மிதுனம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் சாதனை களால் பெருமையடைவீர். சோர்வு நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும். கடகம்: சிக்கலான, சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க போராடுவீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர். சிம்மம்: வெளிவட்டாரத்தில் எதிலும் வெற்றி பெறுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும்.…
மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் ரூ.14.4 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்ட, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் நடைபெற்ற இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து அறங்காவலர் பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேவஸ்தானத்தின் கோயில்களுக்காக சித்தூர் மாவட்டம், பலமனேர் அருகே 100 ஏக்கர் பரப்பளவில் கொடிமரங்கள் மற்றும் தேர்களுக்காக தோப்பு அமைக்கப்படும். திருப்பதி ஸ்ரீபத்மாவதி சிறுவர் இதய சிகிச்சை மருத்துவமனையை நவீனப்படுத்த கூடுதலாக ரூ.48 கோடி நிதி ஒதுக்கப்படும். மும்பை பாந்த்ரா பகுதியில் ரூ.14.4 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்டப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். பக்தர்களின் வசதிக்காக 20 ஏக்கரில் திருப்பதியில் ஒருங்கிணைந்த நகரம் உருவாக்கப்படும்.…
ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தரிசன டோக்கன்கள் இல்லாவிட்டாலும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யலாம் என அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள பக்தர்களின் தங்கும் விடுதியை(பிஏசி-2) தேவஸ்தான அறங்காவலர் பிஆர் நாயுடு ஆய்வு செய்தார். மேலும் அவர் முடி காணிக்கை செலுத்துமிடம், லாக்கர்கள் வழங்குமிடம், அன்னபிரசாத மையம் போன்றவற்றையும் ஆய்வு செய்து, நிறை, குறைகளை பக்தர்களிடம் கேட்டறிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல், ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை திருமலையில் பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கண்ட 10 நாட்களுக்கு பாதுகாப்பு, அன்னதானம், தரிசனம் போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முதல் 3 நாட்கள், அதாவது 30, 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி வரை குலுக்கல் முறையில் பக்தர்கள் தரிசன…
16.12.2025 | விசுவாவசு 01 மார்கழி| திங்கள்கிழமை திதி: துவாதசி இரவு 11.58 வரை, பிறகு திரயோதசி. நட்சத்திரம்: சுவாதி மதியம் 2.07 வரை, பிறகு விசாகம். நாமயோகம்: அதிகண்டம் மதியம் 1.18 வரை, பிறகு சுகர்மம். நாமகரணம்: கௌலவம் காலை 10.39 வரை, பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00. யோகம்: சித்தயோகம் மதியம் 2.07 வரை, பிறகு மந்தயோகம். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: ரேவதி மதியம் 2.07 வரை, பிறகு அசுவனி. சூரிய உதயம்: சென்னையில் காலை 6.23. அஸ்தமனம்: மாலை 5.45. ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30 எமகண்டம்: காலை 9.00-10.30 குளிகை: மதியம் 12.00-1.30 நாள்: தேய்பிறை அதிர்ஷ்ட எண்: 5, 9 பரிகாரம்: பால்
மேஷம்: மனநிறைவு, நம்பிக்கை, உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுங்கள். எக்காரியத்திலும் கவனம் தேவை. பிள்ளைகளால் திடீர் பயணம், அலைச்சல் இருக்கும். வாகனம் செலவு வைக்கும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். ரிஷபம்: விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். உடல்நலம் சீராகும். டென்ஷன் குறையும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள். பண வரவு உண்டு. மிதுனம்: தடைபட்டுவந்த காரியங்கள் சுமுகமாக முடியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். தொழில், வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கடகம்: வீண், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். உடல்நலம் சீராகும். பொருட்கள் சேரும். சிம்மம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லைகள்…
வீட்டில் யாரெல்லாம் விளக்கேற்றால் என்பது பற்றிய சந்தேகமும் பலருக்கும் உள்ளது. அசைவம் சாப்பிட்ட பிறகு என்ன செய்து விட்டு விளக்கேற்றலாம்? விளக்கேற்றுவது பற்றி இருக்கும் பல விதமான சந்தேகங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம். அசைவம் சாப்பிடுவதை காரணமாக காட்டி விளக்கேற்றாமல் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் தெளிவை தரும். தெய்வ வழிபாட்டில் மிக முக்கியமானது விளக்கேற்றுவது. இறைவனை ஜோதி வடிவமாக வழிபடும் பழக்கம் உள்ளதாலும், மகாலட்சுமியின் அம்சம் என்பதாலும் விளக்கேற்றுவது மிகவும் அவசியமாகும். வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் கெட்ட சக்திகள் எதுவும் வீட்டில் தங்காது. அதோடு தெய்வீக சக்திகள், நேர்மறை ஆற்றல்கள் வீட்டில் நிறைந்திருக்கும். வீட்டில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கண்டிப்பாக விளக்கேற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படி ஏற்றப்படும் விளக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். சிலரது வீடுகளில் அசைவம் சமைத்தாலோ அல்லது அசைவம் சாப்பிட்டாலோ விளக்கேற்றமாட்டார்கள். அதே…
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைப்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘உதயநிதி மட்டும் எனது வாரிசு கிடையாது. இங்கு கூடியுள்ள அனைவரும் எனது கொள்கை வாரிசுகள்’ என்றார். அத்தகைய கொள்கை வாரிசுகள் இங்கு கூடியுள்ளோம். திமுகவில் மட்டும்தான் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் மாநாடுபோல நடத்தப்படும். 75 ஆண்டுகளைக் கடந்துள்ள திமுகவுக்கு இளைஞரணி மிகப் பெரிய பலமாகும். குஜராத்தில் அமித்ஷா பேசும் போது ‘பிஹாரில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்து தமிழ்நாடுதான்’ என்று பேசியுள்ளார். எவ்வளவு மிரட்டினாலும், அதை எதிர்கொள்ள திமுக இளைஞரணி தயாராக உள்ளது. சிபிஐ, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் என அரசு…
கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைத்த வெற்றி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைக்கவுள்ள வெற்றிக்கு முன்னோட்டம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. 4 மாநகராட்சிகள், 54 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 77 ஊராட்சி ஒன்றியங்கள், 498 கிராம பஞ்சாயத்துக்களிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. கேரளாவில் 3 மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது. இதில் ஆளும் கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைப் போல, 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது. தமிழகத்தில்…
பாஜகவை விஜய் விமர்சிக்காதது ஏன்?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் பெ. சண்முகம் கட்சி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என பெயர் மாற்றம் செய்ய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது காந்தி என்ற பெயரை மாற்றுவதற்காக இப்பெயரை கொண்டு வந்துள்ளனர். மேலும், உத்தரவாதம் என்பதை நீக்கியுள்ளனர். இதன் மூலம் பயனாளிகள் உரிமையை இழக்கின்றனர். இனி வேலை தருவது அரசின் விருப்பம், அதை உரிமையாக கோர முடியாது. 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் இடங்கள் கேட்போம். 2026-ம் ஆண்டு தேர்தலில் பாஜக, அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வரக்கூடாது. தேர்தலில் அவர்களை வீழ்த்தும் வலிமை படைத்த அணியாக திமுக உள்ளது. தவெக தலைவர் விஜய், பாஜகவை கொள்கை எதிரி என கூறினார். ஆனால், அவர்…
| 15.12.2025 | விசுவாவசு 29 கார்த்திகை | திங்கள்கிழமை திதி: ஏகாதசி இரவு 9.21 மணி வரை, பிறகு துவாதசி. நட்சத்திரம்: சித்திரை காலை 11.06 வரை, பிறகு சுவாதி. நாமயோகம்: சோபனம் நண்பகல் 12.25 வரை, பிறகு அதிகண்டம். நாமகரணம்: பவம் காலை 8.04 வரை, பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 6-7, 9-10.30, மதியம் 1-2, மாலை 3-4, 6-7. யோகம்: பிரபலாரிஷ்டயோகம் காலை 11.06 வரை, பிறகு அமிர்தயோகம். சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி. சூரிய உதயம்: சென்னையில் காலை 6.23. அஸ்தமனம்: மாலை 5.44. ராகு காலம்: காலை 7.30-9.00 எமகண்டம்: காலை 10.30-12.00 குளிகை: மதியம் 1.30-3.00 நாள்: தேய்பிறை அதிர்ஷ்ட எண்: 3, 9 பரிகாரம்: தயிர்
