Author: Editor web1
படைப்புக் கடவுளான பிரம்மாவின் மானச புத்திரர்களான சனகாதி முனிவர்கள், ஞானம் பெறுவதற்காக குருவை நாடிச் சென்றார்கள். பிரம்மா படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாலும், திருமால் இல்லறத்தில் ஈடுபட்டிருப்பதாலும், அவர்களை விலக்கி வேறு குருவை தேடிச் சென்றார்கள். இதனை உணர்ந்த சிவபெருமான் தானும் சக்தியுடன் இருப்பதைக் கண்டால், பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்களே என்று கருதி, 16 வயதுச் சிறுவனாக, வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து வரவேற்றார். பிரம்ம குமாரர்களின் ஞானத்தேடல் குறித்த கேள்விகளுக்கு தட்சிணா மூர்த்தியாக இருந்து, பேசாமல் பேசி பதில் அளித்தார் சிவபெருமான். எனினும், ஞானத் தேடல் பற்றிய கேள்விகள் அவர்களுக்குள் அதிகரித்த வண்ணமே இருந்தன. பின்னர், சின்முத்திரையை அவர்களுக்குக் காண்பித்து அருளினார் தட்சிணாமூர்த்தி. பிரம்ம குமாரர்களுக்கு அமைதியும் ஆனந்தமும் உண்டாயிற்று. அவர்கள் ஞானம் பெற்றனர். தட்சிணாமூர்த்தியின் திருவுருவத்தில் குண்டலினி சக்தியைக் குறிக்கும் நாகம் பெரும்பாலும் வரையப்பெற்றிருக்கும். ஆனால், இப்போது நாம் தரிசிக்கப் போகும் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தியின் காலடியில் நாகம் தனியாகச் செதுக்கப்பட்டுள்ளது.…
தொண்டை நாட்டின் புகழ்பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாக விளங்குவது திருவல்லம். பொதுவாக மக்களின் வழக்கில் இது “திருவலம்” என்று அழைக்கப்படுகிறது. சென்னை – வேலூர் சாலையில் ராணிப்பேட்டை அருகே அமைந்துள்ள இந்தத் திருத்தலம், ஆன்மிக சிறப்பும் வரலாற்று பெருமையும் கொண்டது. ராணிப்பேட்டை – காட்பாடி சாலையில் சிப்காட் தொழிற்பகுதியைத் தாண்டி சென்றால், திருவலம் இரும்புப் பாலம் அருகே இந்தப் பழமையான கோயிலை காணலாம். ராஜகோபுரமும் கோயில் அமைப்பும் பெரிய மதில்களால் சூழப்பட்ட இந்தத் திருக்கோயிலின் பிரதான நுழைவாயிலில் தெற்கு நோக்கிய ராஜகோபுரம் உயரமாக எழுந்து நிற்கிறது. கோபுரத்தின் இருபுறங்களிலும் மண்டபங்களும் பல்வேறு சிற்பங்களும் சிவபெருமானின் திருவிளையாடல்களை எடுத்துக்காட்டுகின்றன. உள்ளே நுழைந்தவுடன் விசாலமான வெளி பரப்பும், அழகான கோயில் அமைப்பும் பக்தர்களை ஈர்க்கின்றன. உள்கோபுரம் நோக்கிச் செல்லும் வழியில் இடப்புறத்தில் அன்னதான மண்டபம் உள்ளது. அதற்கருகே அருள்மிகு ராஜேஸ்வரி உடனாய அம்பிகேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. சிவலிங்கமாகக் காட்சியளிக்கும் இந்தத் தெய்வம் முன்பாக நந்தியும், அருகில்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளில் மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மதுரையை அடுத்த அழகர் கோயில் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரை விழாக்களை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அந்த வகையில் இந்தாண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சி பொறுப்பேற்கும் விதமாக கடந்த 26-ம் தேதி பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. தொடர்ந்து சிவபெருமானை அம்மன் போருக்கு அழைத்த நிகழ்வான திக்கு விஜயம் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது.…
இன்றைய (29.04.2026) ராசி பலன் – மீனம் மாலை வரை சிறு சங்கடங்கள் இருந்தாலும், அதன் பிறகு சாதகமான சூழல் அமையும். பெரிய தொகையைப் புதிய திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது நிதானம் தேவை. தலைவலி போன்ற உபாதைகள் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: பொன் மஞ்சள், லாவண்டர் அதிர்ஷ்ட எண்: 2, 9
இன்றைய (29.04.2026) ராசி பலன் – கும்பம் சந்திராஷ்டமம் இருப்பதால் இன்று மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய வேலைகளைத் தொடங்க வேண்டாம். முடிந்தவரை வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற வாக்குவாதங்கள் வந்து போகலாம், மெளனம் காப்பது சிறந்தது. அதிர்ஷ்ட நிறம்: ஊதா, நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7
இன்றைய (29.04.2026) ராசி பலன் – மகரம் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாள் கனவு நனவாகும் வாய்ப்பு உண்டு. பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு பற்றிய நல்ல செய்தி வரலாம். மனதில் இருந்த கவலைகள் மறைந்து உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், கருப்பு அதிர்ஷ்ட எண்: 4, 8
இன்றைய (29.04.2026) ராசி பலன் – தனுசு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்கு ஜாமின் கையெழுத்து போடுவதைத் தவிர்க்கவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3
இன்றைய (29.04.2026) ராசி பலன் – விருச்சிகம் யோகமான நாள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வரலாம். பங்குச்சந்தை முதலீடுகள் லாபம் தரும். கல்வியில் கூடுதல் ஆர்வம் காட்டிப் பாராட்டுப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு, வெள்ளை அதிர்ஷ்ட எண்: 3, 9
இன்றைய (29.04.2026) ராசி பலன் – துலாம் நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கூடுதல் வேலைப்பளு இருக்கும். குறித்த நேரத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுச் செயல்படுங்கள். நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்: 6, 8
இன்றைய (29.04.2026) ராசி பலன் – கன்னி உங்களின் திறமை வெளிப்படும் நாள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். துணையுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிணக்குகள் நீங்கி நெருக்கம் கூடும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மரகத பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 6
